உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Monday, April 20, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4




"தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்"
"தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.."
"என்ன் செய்துடுவான்..தலையே எடுத்துடுவானோ..?"
"தலைய வச்சாவது சொன்ன நேரத்துல நான் என் கடனை அடைச்சுடுவேன்.."
"தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.."
இப்படி..இப்படி மனிதர்களிடம் தலைப்படும் பாடு சொல்லிமாளாது.தலைக்கு ஏன் இந்த முக்க்யியத்துவம்..?அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது..?

கவிழ்த்துவைத்த மண்சட்டியைபோல் கபாலம். அதில் வலது இடதாய் 700 கிராமுக்கு ஒன்னரைகிலோ மூளை. பிமண்டியயில் முகுளம்.சோள்க்கொல்லை பொம்மையில் குத்தி வைத்ததுபோல் முகுளத்தை இணைக்கும் தண்டுவட் முனை. அச்சில்வார்த்த கேள்விக்குறிகளாய் ரெண்டு செவிகள்.மு மண்டைக்கு நேராக நூறடி ரோடு மாதிரி பெரு நெற்றி.அதன் கீழாக இரு துளைகளில் கோழிமுட்டையை துருத்தி வைத்த மாதிரி இரு கண்கள்.கண்களின் நடுநாயகமாய் சார்த்திவைத்த ஏணி மாதிரி ஒரு மூக்கு.நாசிகோயிலுக்கு பீடம் வைத்த மாதிரி வாய் அதிலொரு நாக்கு.சொல்லிகொண்டே போனால் தலையில் வேறென்ன இருக்கிறது..?
"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்"என்பது லேசான வார்த்தைகள் அல்ல.

உயிர் நடத்தும் ஜனநாயக ஆட்சிக்கு தலைமைச் செயலகம் தலையே.புலன்கள் என்னும் அமைச்சர்களஅமர்ந்திருக்கும் சட்டமன்றம்தான் நம் தலை. சிரசில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்..?உடல்முழுதும் இருக்கும் எண்ணற்ற தொகுதிகளுக்கன நிர்வாக கட்டளையை மூளையிடமிரும்து நரம்புகள் வழியாய் எடுத்துப்போகிறார்கள். உயிரின் நிதியகமான குருதி கிடங்கு இதயத்திலிருந்து நிதியை நாலங்கள் வழியாக நுரைக்க நுரைக்க உடலின் உள்லாட்சி அமைப்புக்கும் இன்னும் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துப்போகிறார்கள்.குடிமக்களான ஒவ்வொரு செல்லும் சுகமாய் வாழ, வயிறான் தானியக் கிடங்கில் சேமிப்பை கண்காணிக்கிறார்கள். 

இப்படி உடல் முழுதிற்கும் தேவையான சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கப்படும் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைதான் நம் தலை.உயிராற்றல் எனப்படும் மின்சார உதவியோடு இயங்கும் அனைத்து புலன்களின் மின் இணைப்புகளின் மெயின் போர்ட் மாட்டப்பட்டிருக்கும் இடமே தலை.கணினி மொழியில் சொல்வதானால் கணினியின் செயல் வேகத்தை தீர்மானிக்கும் மதர் போர்ட் அடங்கிய CPU தான் நம் தலை.இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வராய் இருந்து ஆட்சி செய்பவர்தான் திருவாளர் மனம்.

இவர் இயற்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மன்றத்தில் சின்னதாய் சிக்கலும் உண்டு.அரசியல் கட்சிகள் போலவே right left ஆக அமர்ந்திருக்கும் வலது மூளை ஆளுங்கட்சி என்றால் இடது மூளை எதிர்கட்சி.
வலது - நெருப்பு என்று சொன்னால் போதும் 
இடது - அது சுடுமே என்பார்..
வலது -பர்னால் தடவிக்கொள்ளலாம் என்றால் 
இடது - அது வீண் செலவு என்பார்.

இரண்டு பக்க மூளைக்கும் ஊடாடித்தான் நம் மெய் தேசத்தின் நிரந்தர முதல்வராகிய மனம் ஆட்சி செய்தாக வேண்டும்.
சரி...
முதல்வரின் இருக்கை எங்கே இருக்கிறது.....?
ஏற்கனவே பார்த்தோம் புலான, உடல் உறுப்பாக இல்லாத மனதுக்கு உடலுக்குள் இடம் இல்லை என்று. மன முதல்வர் ஆற்றல் அலையாக இருப்பதால் வெளியேதான் உட்கார வைத்தாகவேண்டும்.உள்ளுறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை திரும்ப திரும்ப செய்பவை. மனம் அப்படியல்ல. அது அந்த உள்ளுறுப்புகளையே மூளை வழியாக இயக்கும் ரிமோட்சென்ஸ் மாதிரி.அந்த ரிமோட் வசதியாக உட்கார்ந்து தன் பணியை செய்ய இய்றகை தேர்ந்தெடுத்த இட்மதான் உச்சந்தலை.ஆண்டெனா மாதிரி கொத்து முடிகள் தூக்கிகொண்டிருக்குமே அந்த தலை உச்சியில்தான் சுருள்வில் இருக்கையிலே கண்ணுக்கு தெரியாத அலை ஆற்றலாக நம் மனம் உட்கார்ந்திருக்கிறது.

கருவறையில் சிசு குடியிருக்கும் முந்நூறு நாட்களில் உயிராற்றல் தொப்புள் கொடி வழியே தாயிடமிருந்து அனுப்பப்படுகிறது. தொப்புள் கொடி அறுபட்டதும் அதன் அழியே முதல் காற்று உடலுள் ஜீவனை இழுத்துப்போய் நெற்றியில் வாய்ப்பதாக ஞானியர் கூறுவார்கள்.அந்த ஜீவஜோதியின் பிரகாசம் அணையும் வரை உச்சந்தலை மனம் அதன் ஒளியை உடலுக்கு உள்ளும் வெளியும் எண்ணமாக செயலாக பரவச்செய்கிறது. முழு உடலும் கருவுக்குள் வளர்ந்தாலும் குழந்தைக்கு தேவையான மனதை பிரசவம் நிகழந்த பிறகே இய்ற்கைமுழுதாக வடிவமைக்கிறது.

வரைபடத் தாளில் இரண்டு அச்சுகள் வெட்டிக்கொண்டால் நான்கு கால் பகுதிகள் உருவாகும் அல்லவா..?அதை போல கபால எலும்புகள் இணையும் ஓர் ஆதிப்புள்ளியில் தோல்மட்டும் மூடிய நிலையில் உச்சிக்குழி என ஒன்று துடிக்கும். அந்த உச்சிகுழி வழியேதான் வாழ்கையை எதிர்கொள்ளத் தேவையான் இயங்குப் பதிவுகளை இயற்கை இறக்கி வைக்கிறது."குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு குடுக்கும்" என்ற சொலவடையில் வரும் கூரை நம் தலைதான், தெய்வம் பிய்க்கும் இடமே உச்சிக்குழி.உடனே உங்கள் தலையில் அப்படியொரு குழியை நீங்கள் தேடுவது தெரிகிறது. முழு மனமும் உருவான சில மாதங்களிலேயே இயற்கை அதை சீல் செய்து அடைத்துவிடும். 

நம் மனதில் ஏற்கனவே programme  load செய்தாகிவிட்டது. அதுவும் மிக நன்றாகவே. கணீனியில் தொடர் பணி நிமித்தம் cpu சூடாகிவிடுவதுபோல் நம் தலையும் சூடாகி செயல்பாட்டில் பங்கம் வராதிருக்கவே நம் பாட்டிகள் உச்சந்தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்க்கிறார்கள். எண்ணெய் முழுக்குப்போன்ற அனைத்துமே அனலடிக்கிற மனதுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியே.

தலை உச்சியில் தலைவனாக உட்கார்ந்திருகும் ஆறாவது அறிவின் அதிபதியான மனதின் அலைநீளத்தை பொறுத்தே நாம் பில்கேட்ஸ் ஆவதும் பிச்சைக்காரர்கள் ஆவதும்.நாளும் பொழுதும் ஒவ்வொரு நொடியும் தலைமேல் அலையாக இருக்கும் மனதைநாம் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதில் நம் முன்னோர்கள் அதிக கவனம் காட்டியிருப்பதற்கான அடையாளங்கள் நிறைய. அதிலொன்றுதான் கரகாட்டம். தலையில் ஏற்றிய கரகத்தை வைக்கப்பட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் உடலின் ஒவொரு ஊசி முனையிலும் கரகத்தின் நர்த்தனம்.மனதின் அதியற்புதத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் தமிழின் தன்னிகரில்லா தமிழ்கலை. நம் கலாச்சாரத்தின் ஒவொரு கலையையும் இதே ரீதியில் ஆய்வுகுட்படுத்த வேண்டும்.

விளையாட்டக மட்டுமன்றி புராணப்படைப்புகளில் அடையாங்களாக மனம்,உடல், மற்றும் உயிர் பற்றிய நுட்பங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என கருத இடம் உள்ளது.வலது மற்றும் இடது மூளையோடு இணைந்து மனதின் ஆற்றல் முதுகு தண்டுவடம் வழியாக மனிதனுக்குள் இறங்கும் அற்புதமான வடிவம்..சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம். மனம்  இருபக்கத்துக்கும் ஊடாடி சப்திக்கும் செயலை சித்தரிக்கும் உடுக்கை. ஒவ்வொரு மனிதனுன் முக்கண்கொண்ட சிவனே.இயேசுபெருமான் மரித்த சிலுவையைக்கூட இதே பார்வையில் பார்க்க பொருத்தமாகத்தான் இருக்கிறது. திரிசூல வளைவுகளை மடக்கி வைத்தால் சிலுவை. சிலுவையின் பக்கங்களை வளைத்தால் திரிசூலம். இஸ்லாமியமார்க்கத்தின் அடையாளமான பிறையின் இரு கூர்முனைகளும் மையத்து நட்சத்திரமும் இதே ரகசியத்தைதான் பறைசாற்றுகிறது.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"

big minds are thinks alikes என்பார்கள். பேருண்மையை எல்லா ஞானியரும் இப்படித்தான் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்போலும்...அது சரி உங்களுக்கு என்ன சிந்தனை..?
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது என்றா..?

வாருங்கள் அதை மனதிடமே 'பளிச்' என்று கேட்டுவிடுவோம்.

No comments:

Post a Comment