உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Tuesday, March 3, 2009

ஆக்ஞா என்றோர் அதிசயம்


ஆக்ஞா என்றோர் அதிசயம்

காஞ்சிபுரம் நமக்கு தெரியும்- தென்னகத்தின் கோவில் நகரம். வரதராஜ பெருமாள் கோவிலைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள். அந்த கோவில் தொடர்பாக நடந்த ஒரு வழக்கு உங்களுக்கு நினைவிருக்கிறதா..? ஆம்..நம் கோவில்களில் பொதுவாக யானையை வைத்திருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..? அப்படி ஒரு யானைக்காகத்தான் வழக்கு நடந்தது.

எதிலும் பேதம் பார்க்க தெரியாத நம் முன்னோர்கள் அனைத்தையும் முறைப்படுத்தி செய்துவிட்டுப்போனார்கள். நம் தொடர்ச்சியில் அது தொய்ந்துவிட்டது.  யானையின் நெற்றியில் வடகலை நாமம் போடுவதா..? தென்கலை நாமம் போடுவதா..? இதுதான் வழக்கு. பார்த்தாரு நீதிபதி விவகாரமான பிரச்சினைதான்-ஆனாலும் தீர்ப்பு தந்தாகணும் "வருஷத்துல வடகலை நாமம் 6 மாதம், தென்கலை நாமம் 6 மாதம்" என்றார். இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.சிவாலய யானைக்ளுக்கு எந்த பிரச்சினையுமில்லை, நிம்மதியாக பட்டை போட்டுவிடுகிறோம். யானைகளின் ஆக்ஞாவாகிய நெற்றிக்கே இந்த பாடென்றால் நம் நெற்றியின் பாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

நமது நெற்றி பெருவெளியைத்தான் ஆக்ஞா என்கிறோம். அந்த மேடையில் பெண்கள் திலகமிட்டுக்கொள்கிறார்கள்.ஆண்கள் திருமண்ணை குழைத்து சைவர்களாக இருந்தால் குறுக்காக மூன்று கோடுகளை பட்டையாகவும், வைணவர்கள் நாமமாகவும் இட்டுக்கொள்கிறார்கள். அதிலும் பிரிவுண்டு மேற்சொன்ன மாதிரி வடகலை,தென்கலை,ஆரஞ்சு நிற சூரணத்தில் ஒரே கோடாக போட்டுக்கொள்ளுதல் என பல.
கிறிஸ்துவர்கள் இம்மாதிரி எதையும் நெற்றியில் இட்டுக்கொள்வதில்லை என்றாலும், அவர்கள் வணங்கிமுடித்ததும் கைகளால் இட்டுக்கொள்ளும் மானசீக சிலுவை நெற்றியில்தான் முடிக்கப்படுகிறது. இசுலாமியர்களும் எந்த சின்னத்தையும் அணிவதில்லை என்று சொன்னாலும், அவர்களின் தொழுகை முறையே, குனிந்து நிமிர்ந்து தம் நெற்றியை மண்ணில் வைத்து தூண்டல் ஏற்படுத்துவதேயாகும். தினமும் ஆறுவேளை தொழுகை நிமித்தம் அவர்தம் நெற்றியில் உருவாகும் கறுப்பான அடையாளம் அவர்களுக்கான கௌரவம் என்பதை யாராவது இசுலாமிய நண்பர்களிடம் விசாரித்து பார்த்தால் விளங்கும். மேல் நெற்றியில் ஒருவித கறுப்பு மையை அணியும் இசுலாமிய அன்பர்களும் உண்டு.
பிரம்மனை வணங்கும் ஒரு பிரிவினர்- சந்தனத்தை குழைத்து நெற்றியின் வலது இடது முனைகளில் முத்திரையாக இட்டுக்கொள்வார்கள். புத்தமதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் இப்படி தினமும் போட்டு அழித்துக்கொண்டிருக்காமல் நிரந்தரமாக மூங்கில் குச்சியால் சூடே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி மனித நெற்றி உலக முழுமையும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவ்ம் தரப்பட்டு கொண்டாடிவந்திருக்கிறது.

நாம் இதுவரை வேற்றுமைகளில் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதையே மனமுவந்து செய்துவந்திருக்கிறோம். மனித நெற்றி அனைவருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு உண்மையாகும்.
இன்றும் நம் பள்ளீசெல்லும் குழந்தைகளும் சரி. பெரும் நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளும் சரி, யோசிக்கும்போது நெற்றியில்தான் கை வைக்கிறார்கள். முடிவெடுக்க முடியாமல் நாம் திணறும் பொழுதுகளில் எல்லாம் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது நெற்றிதான்.

நெற்றி நம் ஜீவன் துலங்குமிடம். இப்படிகூட சொல்லலாம். ஒரு சின்ன கற்பனை - வலதுகாதின் வழியாக ஒரு கம்பியை இடது காது வழியாக வெளியேவருமாறு செருகுவோம். இதேபோல உச்சியிலிருந்து ஒரு கம்பி, நாசிவையாக உச்சிக்கு ஒரு கம்பி, இரண்டு கண்கள் வழியாக பிந்தலைக்கு இரு கம்பிகள் என செருகி பார்த்தால் இவை அனைத்தும் ஒரு கூடு புள்ளியில் அதிர்வோடு சந்திக்கின்றன . அந்த அதிர்வுபுள்ளிதான் ஆக்ஞா என்கிற நம் புருவ மத்தி. தியானம் செய்யும்போது இந்த புருவமத்திதான் கவனிக்கபடுகிறது.படத்தில் காட்டியபடி..நமக்கான உயிராற்றலும், உணர்வாற்றலும்,மன ஆற்றலும் சகஸ்ராரம் என்கிற எண்ணமற்ற ஒருமை புள்ளியிலிருந்து, logic, மற்றும் sensitiveஆக இயங்கும் வலதுமூளை, மற்றும் இடது மூளை வழியாக பிரிந்து, பின்னர் ஒரு எண்ணமாக அடுத்த நெற்றி மையத்தில் குறுக்காக வெட்டி இணைகிறது. மற்ற புள்ளிகளிலும் இதைப்போலவே பெருக்கல் பெருக்கலாக வெட்டி இணைகிறது.

இது எதற்காகவென்றால் - நேர்மறை எதிர்மறைகளுக்கிடையில் நம் வாழ்வு நடக்க வேண்டும் என்பதற்காக..
பல பில்லியன் வருடங்களாய் இந்த் உலகின் தோற்றத்துக்கான காரணம் அறியமுடியவேயில்லை. இன்னும் நாமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். வலது மூளை எரிகிற ஒன்றை பார்த்து இது நெருப்பு என அடையாளப்படுத்தும். இடது மூளை உடனே "ஆம் அது சுடும் "என்று சொல்லும். நடுமூளை இப்போது நெற்றியில் தீர்க்கமாக முடிவெடுக்கும். "அதை தொடக்கூடாதென்று"- இந்த முறையில்தான் கணப்பொழுதுகளில் இவ்வளவு படிநிலைகளுக்குள் இயங்கி நம் உயிராற்றல் வேலை செய்கிறது.ஆக நம் வாழ்விற்கான எல்லா தீர்மானங்களையும் எடுக்குமிடம் நம் நெற்றி என புரிகிறதா..? அதுதான் நம் முகவரி அட்டை. அங்கிருந்தபடிதான் நம் சுயம் வேலை செய்கிறது.

மேலாண்மை தத்துவத்தின்படி- இரண்டுபேர் சொல்கிற கருத்தை வாங்கி ஒருவர் முடிவெடுப்பதென்பது சிரமமான வேலை. நம் நெற்றி கால்காலமாய் இதைத்தான் செய்கிறது. அது சுறுசுறுப்பாய் செயல்பட வைக்க அதன் மீது தூணட்ல் ஏற்படுத்தவே திருனீரு பூசுதலும், நாமம் இடுதலும்,குங்குமம் இடுதலும்,தரையில் கொண்டு வைத்து தேய்ப்பதும். 
"மூலாதாரத்து மூண்டெழு கனலை 
காலாலெழுப்பி கருத்தறிவித்தே.."-என்று ஔவை சொல்லும் காலால் கருத்தறிவ்க்குமிடம் இந்த நெற்றியே.இங்குதான் நாம் எதையும் காட்சியாககூட பார்க்கிறோம்.அங்கு பளிச்சென ஒன்று தோன்றிவிட்டால் நாம் முடிவை எட்டிவிட்டவர்களாகிறோம். "விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து.." என்ற இடமும் நம் நெற்றியே.

இடகலை-பிங்கலை-சுழுமுனை என்கிறோம் அல்லவா அவற்றிலிருந்து- புறப்படும் மூன்று மெல்லிய நரம்புகள் இந்த நெற்றி மையத்தில்தான் இணைகின்றன. இது ஒரு சிலருக்கு மெல்லிய பச்சை நிறத்தில் நெற்றியிலேயே தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதி முக்கியம் வாய்ந்த அந்த நரம்புகளில் நேர்மறையான் தூண்டல்களை ஏற்படுத்தவும், அந்த நரம்புகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவுமே நெற்றி பரப்பில் 'சில்லென்ற "உணர்வை தந்து பரபரவென முடிவெடுத்தலில் ஓயாமல் இயங்கும் நெற்றிக்கு சந்தனம்,திருனீரு,வெங்கலசிலுவை,ஈரபூமியோடு உரசல் எல்லாமே. 

முன்னோர்கள் வெவ்வேறு விதங்களில் ஓரே மாதிர்யான உண்மையை கண்டிருக்கிறார்கள் என உணர்வதில் எந்த தவறும் இல்லை.

காலையில் குளித்து முடித்து-நெற்றியில் திருமண்-குங்குமம் இட்டுக்கொள்வது -அனுதினமும் நாம் நமக்குள் எடுத்துக்கொள்ளும் சத்தியப்பிரமாணம் அன்றி வேறில்லை. அது என்ன சத்தியப்பிரமாணம்.."இறைவா நான் இங்குதான் இருக்கிறேன். என் சுயம் ஒளிர்வதாக. இங்கிருந்து நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன் முடிவு.அது அன்பில் தோய்ந்து,ஒழுக்கத்தில் மிளிர்ந்து,விழிப்பில் நனைந்து - எனக்கும் இந்த உலகுக்கும் நன்மையை சேர்க்கட்டும்."என்பதுதான் அது. சர்வ நிச்சயமாக நெற்றியை தூண்டும்போது மட்டுமே இந்த் எண்ணம் தோன்றுவது அனுபவித்தவர்களுக்குமட்டுமே தெரியும். இனி நீங்கள் அன்புஅவித்தால் உங்களுக்கும் புரியும்.

அப்படி நெற்றி மையத்திலிருந்து முடிவெடுக்க தவறினால் என்ன நிகழ்ந்து விடும்..? முடிவெடுக்கும் பொறுப்பை அடுத்த மையம் ஏற்றுக்கொள்ளும். அது எம்மாதிரியான முடிவை எடுக்கும்..?
தொடர்ந்து சந்திப்போம்.....


 

No comments:

Post a Comment