உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Thursday, March 5, 2009

இதயம் ஒரு கோவில் - அனாகதம்


இறைமயமும் ஒருமைனிலையும் ஒருங்கே அமைந்த முதல் மையம் சகஸ்ராரம். அங்கு பொறி புலன் ஒடுங்கி - சும்மா இருப்பதே சுகமெனு உயர் நிலையில் இருந்த நாம்- நம் இருப்பை உலகுக்கு அறிவிக்க ஒரு எண்ணம் பிறந்து நெற்றி எனும் ஆக்ஞாவில் சுயத்தை உணர்ந்தோம். எண்ணிய அந்த எண்ணத்தை மொழிக்கூறின் ஊடாக விசுக்தி எனும் தொண்டைகுழி வழியே பேசினோம். நாம் ஒன்றை பேசுவது அடுத்தவரை நோக்கியோ அல்ல்து சமுகத்தையாதாகவோ இருக்கும். பேசியவர் ஒருமை எனும் தன்னிலையிலும், கேட்பவர்கள் ஒருவராகவும், பலராகவும் இருக்ககூடும் என்பதால்,நம் கருத்துக்கு ஒப்புதலோ, எதிர்ப்போ எழுவது தவிர்க்க முடியாத கட்டாயம். இந்த மெய்மையை நாம் வாழ்வின் கணந்தோறும் அனுபவிக்கிறோம். அதற்கான எதிர்வினையை காட்டும் மையமாகத்தான் அனாகதம் என்கிற உணர்வு மையம் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தன் நெற்றியில் பிறந்த ஒரு எண்ணத்தை ஒருவர் இப்படி அறிவித்தார்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..........."கையை நீட்டி உலகுக்கெல்லாம் காட்டி தன்னை - நல்லா கேட்டுக்கோங்க "நான் வேற யாருமில்ல...உங்க வீட்டு பிள்ளை....."-அப்படின்னாரு.
இதை ஒத்துக்கறவங்களும் இருப்பாங்க- மறுப்பவங்களும் இருப்பாங்க- எதிர்க்கறவங்க என்ன கேட்க முடியும்..?"அது எப்படி நீ எங்க வீட்டு பிள்ளை ஆக முடியும்,,?" அப்ப்டிங்கற கேள்வி வரற்துக்கு முன்னாலியே, அடுத்த வரி வரும்.."இது ஊரறிந்த உண்மை..." அடடா உங்களுக்கு இந்த உண்மை தெரியலன்னா நான் செய்யட்டுங்கிற மாதிரி எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு முன்னரே- தற்புரிதலுக்கான விடையையும் தந்திருப்பார்.
அவருக்கு சரி- நாம் ஒன்றைசொல்லி சமுகம் கேள்வி எழுப்பும்போது - விடையும் விளக்கமும் தரும்முன்னர் இந்த மையம் அதிரும், துடிக்கும்.."ஆ..நான் சொன்னதை யாரும் ஒப்புக்கலையே.."வெம்பும்.

அனாகதம் எங்கிருக்கிறது- நம் உடலில் கழுத்துக்கு கீழே - இதய்த்திற்கும், நுரையீரலுக்கும் நடுனாயகமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதயத்தின் வேலை உதிரத்தை நொடிதொறும் சுத்தம் செய்து உடல்முழுவதற்கும் அனுப்புவது. நுரையீரலின் வேலை -உடலின் காற்று வரவு செலவை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்தல்.
இதயம் இயல்பாகவே துடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஆரோக்கியமான உடல் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்க வேண்டும், சுவாசம் எத்தனை முறை ஏறி இறங்கவேண்டும் என்றெல்லாம் முறையான கணக்கு உண்டு. இதெல்லாம் நமக்கு தெரியாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று இதய துடிப்பை கூட்டிக்கொண்டோ, அல்லது குறைத்துக்கொண்டோ துன்பப்படுகிறோம்.

நம் உடலின் ஆதார சக்கரங்களின் இயல்பு பற்றி இன்னொரு குறிப்பு தருகிறேன். எப்படி நெற்றி எண்ணியதை வாய் பேசியதோ - இந்த சங்கதியை இப்படி உணர் என இதய்த்துக்கு அறிவு சொல்லி இதயம் உணருமோ அதைப்போலவே, சமயங்களில் கீழிருக்கும் மையங்கள் நெற்றியை தங்களுக்கு ஏற்றமாதிரி நெற்றியை சிந்திக்க சொல்லும்.
கயிறு பாம்பாகி பயமுறுத்துவதும், பாம்பு கயிறாகி தூக்கி வீசப்படுவதும் இதனால்தான்.

இந்த மையத்தில் உதிர ஓட்டம் எப்படி தடையில்லாமல் நடக்கிறதோ இறந்துப்பட்ட செல்கள் ஒதுக்கப்பட்டு - நித்தமும் நவனவமாய் புது மூலக்கூறுகள் உருவாகிறதோ அதைப்போல நாம் பார்க்கும் நிகழ்வுகளின், கேட்கும் நிஜங்களின் வீர்யத்தையும், படிக்கும் விபரீதங்களையும், பார்த்து, கேட்டு, படித்து முடித்தவுடன் வெகு இயல்பாக அதை புது ஓட்டத்திற்குரிய சிந்தனை பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் உணர்வு மையம் உங்களை அங்கிருந்து நகரவிடாது. நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறோம்- சாலையில் ஒரு கொடூர விபத்து பார்க்கிறோம். எது எங்கே இருக்கிறதென்றே தெரியாத நிலை.எனென்ன வகையான விளைவுகள் நிகழ்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒருவரால் அடுத்த மூட்ரு நாளுக்கு சாப்பிட முடியவில்லை. அனாகதம் அந்த காட்சியை திரும்ப திரும்ப நெற்றியில் வைத்து பார்க்க வைத்து அதிலிருந்து மீல முடியாமல் ஆட்டுவிக்கிறது. இன்னொருவர் பார்த்ததுமே மயங்கிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகவேண்டிய நிலை. இன்னொருவர் "ராங் சைடுல வந்திருக்காரு அதான் மாட்டிக்கிட்டாரு" தர்கரீதியாக சிந்திக்கிறார். ஒருவர் "சின்ன வயசு ஆளா "என்கிறார்.வயதை வைத்து மரணத்தை ஞாயப்படுத்திக்கொள்ளும் தனக்குதான் நீதிபதி இவர். இன்னொரு ஆசாமி இருக்காரு அவர் என்ன செய்வாரு தெரியுமா.."ஒரே தூக்கா தூக்கி இருக்கான்யா..ஒடம்பு சட்னி ஆயிருச்சி" என ரசிக்கிறார். இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம்.

இதை நாம் பட்டியிலிட காரணம்- நாம் என்ன செய்வோம் என நினைத்து பார்ப்பதுதான். அனாகத மையத்திலேயே அதை சுமந்துகொண்டிருக்கப் போகிறோமா..? அல்லது "சரி. விதி வந்துச்சி நடந்துச்சி. பாவம் அந்த ஆன்மா சாந்தி அடையட்டும், அந்த குடும்பம் கஷ்டம் இல்லாம கரை ஏற வழி காட்டுடா ஆண்டவான்னு" அடுத்த நிகழ்வுக்கு தயாராகப்போகிறோமா..?

அனாகத மையத்தின் அடுத்த இயல்பு இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவித்தல்.ஆம் லாட்டரியில் கோடி விழுந்தால் இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. விழவில்லை எனில் துன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. 
கிரிக்கெட்டில் கடைசி பந்தில் ஆறு ரன் அடித்தால் ஒருவர் சாகிறார். அடிக்காவிடில் இன்னொருவர் சாகிறார்.
அனாகத மையத்தை மிக சரியாக கையாள வேண்டும். நம் மனதின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கிடங்கு இது.கோபம்,எரிச்சல்,வெறுப்பு,அன்பு,கருணை,இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் குத்தகைதாரர் இவர்தான். மனிதருக்கு வரும் சகல நோய்க்குமான அடித்தளம் இந்த மையத்தில்தான் இடப்படுகிறது. மனதுக்கும் சசுவாசத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல், மனதுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால்தான் விழிப்பில்லா மனம் சட்டென அதிர்ச்சியில் உறைய இதயம் படபடவென துடிக்க துவங்குகிறது.

இதயம் வேகமாக துடித்தால் -சுவாசம் எகிறும்- சுவாசம் எகிறினால் மந்துக்கு அளவற்ற ஆக்சிஜன் போய் - என்ன செய்வது எந்த மையத்திற்கு ஆணையிடுவது என தெரியாமல்- வாய் குளறல்- ஒரு அதிர்வை கண்டதும் ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம். இன்னும் சிலருக்கு சிறு நீர் தானாய் கழிதல், பெரும்பாலானோருக்கு மாரடைப்பு.ரத்த குழாய் வெடிப்பு.

பயப்படவேண்டாம். பின் இந்த மையத்தை எப்படித்தான் மேலாண்மை செய்வது..?
கத்தரை பாருங்கள். தூய நெஞ்சில் பேரொளி பிரகாசிப்பது தெரிகிறதா..?சீதையிடம் அனுமன் நெஞ்சை பிளந்து காடினானே- அதைப்போல- நன்கு உணரப்பட்ட இறைனிலையை அல்லது இயற்கை ஒழுங்குனிலையை அங்கு பதியன் போடுவதுதான். உணர்ச்சிகளின் கட்டுக்குள் சிக்கி விடாமல்- அறிவாலும், விழிப்புணர்வினாலும் நாம் இந்த மையத்தை மேய்க்க வேண்டும்.




மிக சரியாக நிர்வகிக்கப்படும் அனாகதத்தால் துன்பமில்லை - நோயுமில்லை- உணர்ச்சிவசப்படுதல் இல்லை.
எல்லாமே நம் கட்டுக்குள். கட்டாவிட்டால் தொடர்விளைவுகளை சந்திக்க அடுத்த மையம் தூண்டப்படும். எப்படி,,,?
மீண்டும் தொடர்வோம்.....











 

1 comment:

  1. அன்புள்ள தாயுமானவருக்கு,

    அனாகதம் என்ற ஓர் அதிசயத்தைப் பற்றி மிகத் தெளிவாக எழுதி வாசகர்கள் எல்லோரும் பயனபெற வேண்டுமென்ற உங்கள் அன்புள்ளத்தை போற்றுகிறேன்.

    அன்புடன் என் சுரேஷ்

    ReplyDelete