உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Friday, February 27, 2009

அடங்குவோம் - அடக்குவோம்


இறைவா..,
என்னையொரு 
பானையாய் வனைந்து 
பொன் பொருள் என 
நீ இட்டு நிரப்பியும் 
போதாமல் 
இன்னும் உன்னிடம் 
குறையிரந்துகொண்டே இருக்கிறேன் 
நான்.

கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.
பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.
ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.
நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?
'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'
இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'

இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.
அவர் அடங்க தவறிட்டாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.

அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.
ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும். 

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.

நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.

கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.
எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நாங்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ
"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"

அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?
சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.

Wednesday, February 25, 2009

நினைவாற்றலின் அறிவியல்


--மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர்
இடம் உண்டு.
இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.
அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான
வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற
உரையாடல்களை கேட்கமுடியும்.

நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்
கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்க
தொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்
முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லி
அழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்
சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.

தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தை
நினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காக
அவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,
வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்கு
சகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பை
காலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து  திரும்ப
மாட்டிக்கொள்ள உதவுகிறான்.

கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்கு
சென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்
கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்து
தந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.
எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.

நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடு
சம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசைய
வேண்டிய அவசியமும் இருக்கிறது.
நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்த
கருவியும் கிடையாது.
செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.

உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்
உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.
உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.
கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-
மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்
காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.

ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்
காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்
அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.
காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலை
நீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரண
FM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.
த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?
ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.

இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்
என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சில
விஷயங்கள்தான்.
இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்
இல்லை. உணர வேண்டும்.
நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.

1.கவனித்தல்.(Listening)
ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்
கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்
புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அது
அதன் அடுத்த படினிலைக்கு போகிறது.

2.பதிவு(Recording)
நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறது
தெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொரு
விந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு
80%எனில் பதிவு 40%தான்.
அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவு
செய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்
தண்டனையா எனவும் தெரியவில்லை.

3.இருப்பு வைத்தல்(Retaining)
கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாக
பொதிந்து வைக்கிறது.
பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்பு
வைப்பது எதற்காக..?

4.திரும்ப கேட்டல்(Recalling)
ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்
இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,
100 சதவீதம் எனில்
இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.
அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு
20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.

நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்
காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடை
புலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்
ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதே
நேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்
தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்
இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்
இயல்பே.
இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.

ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?
ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?
தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காக
படிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.

இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.
ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்
இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..
வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.
அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெ
யர் சொல்லி
கை குலுக்குகிறார்.
விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்
பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,
கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"
இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.
அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.
வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.

பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படி
இருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.
அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று.
"நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்
சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்
இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.

கவனியுங்கள்....கவனியுங்கள்....
.கவனியுங்கள்...!

Sunday, February 22, 2009

ஆடு பாம்பே..!

இந்திய ஆன்மீக தேற்றத்தில் எண்ணற்ற  கட்வுளர்கள். மனித உருவில், ஆண்- பெண் தெய்வங்களாக மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு கடவுளுக்கும் தனிதனியே வாகனங்கள் என்ற பெயரில் விலங்குகள் என ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்க முடிகிறது.
உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத் அளவுக்கு நம் ஆன்மீகத்தில் விலங்குகளுக்கான முக்கியத்துவம் அளவிடற்கரியது.
பசு முதற்கொண்டு பல்லி, தவளைவரை அனைத்துக்குமே ஆன்மீக முக்கியத்துவம் தந்திருப்பது நாம் மட்டுமே என்றால் மிகை இல்லை.வாகனங்கள் என்ற அளவில் வித்தியாசம் இருந்தாலும், இன்று நம் கட்டுரைக்கு நாம் எடுத்திருக்கும் விஷம் மன்னிக்கவும் விஷயம் பாம்பு.
படையையே நடுங்கவைக்க கூடிய, கொடிய விஷமுள்ள பாம்பு, கடவுளர்களிடம் 'பச்சக்கென்று'ஒட்டிக்கொண்டது எப்படி..?ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாக எனக்குபட்டது.
சிவனின் கழுத்தை சுற்றி இருந்துகொண்டு அவரது தலையிலேயே சர்வகாலமும் இருக்கிற பாம்பு பற்றியும்,
கண்ணன் ஏறி நின்று நடம் புரிந்த ஐந்து தலை நாகமும், மகாவிஷ்ணுவுக்கு பார்கடலில் மெத்தையாய் விளங்கும் ஆதிஷேஷன் பற்றியும்,அம்மனின் கைகளில் இருப்பதும்,வினாயகனின் இடுப்பில் கட்டபட்டு இருப்பதும், கந்தவேலனின் அரும்பெரும் வாகனமான் மயிலின் காலில் மிதிபட்டிருப்பதுமான ஒரே பாம்பினத்தின் வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்க வேண்டியிருக்கிறது.
மிக சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறுவதுண்டு.
இந்திய ஆன்மிக பண்பாடு என்பது "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்ககூடியது" என்று.

எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை காண வேண்டி உள்ளது.
உலக உயிர்கள் அத்தனைக்குமே-நேர்மறையான சக்தியும், எதிர்மறையான சக்தியும் உண்டு.மனிதன் உள்ளீடாக.
நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையுமே காரணகாரியத்தோடுதான் வைத்திருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து,.மிக அக்கறையோடு குறியீடு ஆக்கி இருக்கிறார்கள்.

பாம்புகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். பாம்பு மகுடி வாசித்தால் படம் எடுத்து ஆடுவதை நாம் கூட பார்த்திருக்கிறோம்.ஆனாம் பாம்புக்கு காதுக்ள் கிடையாது. பூமியின் மீது பதியப்படும் அதிர்சியை தன் உடல் வழியே உள்வாங்கி உணரக்கூடியது எனும் கருத்தும் உண்டு.

பாம்பு மனிதனுக்கு கட்டுப்படாத (சினிமா பாம்புகள் தவிர்த்து) ஒரு உயிரினம். அதை பழக்கப்படுத்த முடியாது என்பதில் ஆதி மனிதன் எப்படியோ முடிவெடுத்துவிட்டான்.அது இன்று வரை தொடர்கிறது. ஆயினும் ஆன்மீகத்தில் பாம்புக்கு அப்படியென்ன முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதே நம் கேள்வி.
நம் கலாச்சாரத்தில் பக்தி என்பது ஞானம் பெறுவதற்கான் பயிற்சி களம்.எல்லைஅற்ற அன்பை பெற பக்தி நிலையில் நாம் கவனம் செலுத்தி நாம் செய்யும் அன்பு பயிற்சிதான் ஞானம் அடைவதற்கான படி.

பெருவெடிப்புக்கான (big-bang) தொடர்ச்சியில் உருவான எண்ணற்ற கோள்களில் நாம் கணக்கில் வைத்திருப்பது ஒன்பது. அதில் முழு கிரகங்கள் ஏழு, சாயா எனும் நிழல் கிரகங்கள் இரண்டு. அந்த இரு நிழல் கிரங்கங்களுக்கும் நாம் தந்திருக்கும் வடிவம் பாம்பு.(ராகு,கேது). அவ்வப்போது வந்துபோகும் கிரகணங்கள் இரண்டு. அதில் சந்திரகிரகணம் என்பது நிலவை பாம்பு விழுங்குவதானது.
ஜோதிட உலகின் கூற்றுப்படி- சந்திரன் என்பது மனதின் அம்சம். இங்கிருந்து நம் ஆய்வை கொண்டுசெலுத்தினால் ஓரளவுக்கு இலக்கை அடைய முடியும் என தோணுகிறது. 
பாம்பானது நிலவை விழுங்கும் நிகழ்வை நாம் எப்படி பார்க்கிறோம்,,?
கிரகணம் முடிந்ததும் வீட்டை மெழுகி,அனைவரும் குளித்து,குளிக்கும் வரை சாப்பிடாமல் இருந்து-இப்படி பலபல கருத்தியல்கள்.ஆக நிலவை பாம்பு விழுங்குவது மங்களகரமான விஷயமில்லை.
பாம்பின் அம்சம்- மனதை குறிக்கும் நிலவை விழுங்குதல் கூடாது.
நம் மனதை எந்த பாம்பும் வந்து விழுகிவிடப் போவதில்லை..ஆனால் பாம்பின் அம்சம் விழுங்க வாய்ப்புள்ளது.
பாம்பின் அம்சமென்ன..?
எதிர்மறை அம்சம்- பாம்பு மிகவும் கோபப்படக்கூடியது. அதன் சீற்றமே இதற்கு சாட்சி. பாம்பு தன் எதிரியை வஞ்சம் வைத்து கொல்லகூடியது.அது படமெடுத்தாடும் வேகமானது "நான்"என நிமிர்ந்து நிற்கும் ஆணவத்தின்,தனிமனித ஆளுமையின் குறியீடு.தீண்டியதும் மரணம் தரும் விஷத்தை தன்வசம் கொண்டது.
நம் ஒவ்வொரு கோயில்களிலும் தென் திசைபார்த்து சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கிறோம். அவரது சின் முத்திரை நமக்கு சொல்ல்க்கூடிய செய்தி என்ன..?
"நான் என்கிற ஆள்காட்டிவிரலை, சினம் என்கிற நடுவிரல்,செருக்கு என்கிற மோதிரவிரல்,சிற்றின்பம் எனும் சுண்டுவிரல் இவற்றிலிருந்து விலக்கி, பரம்பொருள் எனும் கட்டைவிரலோடு சேர்த்துகொள்வதே.
"நான்"எனும் சுயம் இருக்கவேண்டிய நிலைப்பாட்டைகுறித்து சிந்தித்த முன்னோர்கள் பாம்பை கையில் எடுத்துள்ளார்கள் எனும் முடிவுக்குவர ஏதுவாய் இருக்கிறது.

பாம்பின் நேர்மறை அம்சம்- தன்னிடம் உள்ள விஷத்தை பிரயோகிக்காமல் அப்படியே வைத்திருக்கும் பாம்பு அதை குறிப்பிட்ட நாளுக்கு பின் மாணிக்க கல்லாக மாற்றுகிறது. மாணிக்கம் ஒளி வீசிக்கூடியது.
மதி, மந்திரம்,மருந்து,மாணிக்கம் என்றொரு வரிசை சொல்லப்படுவதுண்டு.
ஒவ்வொரு மனிதனும் தம்மிடமுள்ள தீயதை பிரயோகிக்காமல் அதை தவமாக மாற்றி ஒளிரூபத்துக்கு மாறவேண்டும்.

இக்கருத்து எனக்கு மிகவும் உடன்பாடாய் உள்ளது.
பார்கடலில் துயிலும் விஷ்ணு வெறுமனே தூங்கவில்லை. அவர் அறிதுயிலில் இருக்கிறார்.அனைத்தையும் அறிந்துகொண்டே தூங்கியும் தூங்காத நிலையில் படுத்திருக்கிறார்.அவரை மீறி ஆதிஷேஷன் விளையாடுவானேயானால் அதை கருடன் பார்த்துகொள்வார்.
மூலாதார கடவுளான கணபதி நாகத்தை தன் இடுப்பில் கட்டி இருக்கிறார்.ஆணவத்தையும், சினத்தையும்,வஞ்சகத்தையும், தலை எடுக்கவிடாமல் இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்,
முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை.மயில் தன் இனப்பெருக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பது இன்னும் யாரும் அறியாத சங்கதியாகவே உள்ளது. ஆறறிவு கடவுளுக்கு அதனால்தான் மயில் வாகனமானது. அந்த அறிவின் கால்களில் அடங்கி ஒடுங்கி சுருண்டுகிடக்கிறது பாம்பு.
அந்த பாம்பை இப்படியெல்லாம் பழக்கிவிட்டால் அப்புறம் சிவனை போல அதை கையில்,கழுத்தில்,தலையில்,எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
அகந்தையையும்,ஆணவமும்,நான் என்கிற செருக்கும் நம் கட்டுக்குள் இருக்கும்.




யோகவியல் ரீதியில் பார்க்கும் பார்வைதான் பாம்பிற்கு நாம் தரும் உச்ச மரியாதை.
சுயமனித சக்தியை உசுப்பி எழுப்பும் குண்டலினி எனும் மாயசக்தி நம் மூலாதாரத்தில் ஒரு பாம்பு வடிவில் தூங்குவதாகத்தான் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்
அந்த பாம்பு நமக்குள் எப்படி வந்தது..?எப்போது வந்தது,..?
பாம்புகள் வசிக்கும் புற்றை உற்று நோக்குங்கள். அதன் உச்சி வழியாக-தலையை முதலில் உள் நுழைத்து- வால் இறுதியாய் மறைய உள்ளிறங்கும்.
வெளியே வரும்போது தலை முதலில் தெரிய வெளிப்படும்.
நமக்கும் அப்படித்தான் உச்சி தலை வழியேதான் உயிராற்றல் இறங்கி வருகிறது. அதை மீண்டும் உயர்த்த வேண்டும்.
குண்டலினி பாம்பு தன் விஷத்தை பிரயோகிக்காமல் -உச்சிக்கு வநது மாணிக்கத்தை கக்க வேண்டும்.
நாம் ஒளிரூப மனிதர்களாய் மாறவேண்டும்.
நமக்குள் இருக்கும் பாம்பை ஆட்டுவிக்க இன்றே மகுடியை எடுப்போமா..?



Saturday, February 21, 2009

கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்


அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்..? வழக்கமான கேள்விதான். ஆனால் இந்தக் கட்டுரை வழக்கமான கட்டுரை அல்ல.
ஏதோ ஓர் நாளில் இந்த உலகம் இல்லாமல்தான் இருந்தது. அதுபோலவே ஓர் நாளில் இல்லாமலும் போகக்கூடும்.
 இடையில்  நடந்துகொண்டிருப்பது சிறு விளையாட்டே. விளயாட்டின் நிமித்தம்  நமக்கு கிடைத்திருப்பது..நாகரீகம்.,மொழி,சமயம்,மதம்,அறிவியல்,சித்தாந்தங்கள்.இதுவும் ஒரு நாள் இல்லாமல் போகக்கூடும் அல்லது தன் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மக்களின் இசைவோடு மாறக்கூடும்.
எந்த வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்படாத பல நூறுவகையான கடவுளர்கள் அனுதினமும் உருவாகிக்கொண்டே உள்ளனர்.

வீதியோரத்து "லக்கி பிள்ளையார் "முதல் "வழித்துணை அம்மன்" வரை நம் தனிப்பட்ட விருப்புகளை தெய்வத்தின்மேல் செலுத்தி வருவதாகத்தான் தோணுகிறது எனக்கு. கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை மீறி நாம் கற்றுக்கொள்ள பாடம் செய்யப்பட்ட குறியீட்டு பாடங்களாய் அவர்கள் இருப்பதாக நம்புபவன் நான்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையும் மலர்கிறது.

கொழுக்கட்டை- காலம் கால்மாக வினாயக சதுர்த்தி அன்று நாம் படையிலிட்டு வருகிற ஒரு தின் பண்டம். கீதை மகாபாரதத்தின் அங்கமாய் கிருஷ்ணர் அருளிய ஞானப்பொக்கிஷம்.

இவை இரண்டுக்கும் நிகழ்வின் அடிப்படையில் தொடர்பு தேடாமல் பொருளின் அடிபடையில் தொடர்பு தேடிய முயற்சியே இக்கட்டுரை.

மனிதனுக்கு இருக்கும் ஒரே வசதி- கண்களை மூடி நினைத்தால் நினைத்த பொருளை அகக் கண் காட்டும். அதுதான் நெற்றி இருக்கே பளிச்சுனு படம்போட்டு காடறதுக்கு.., இப்ப நீங்க என்ன செய்யணும்னா இன்னிக்கு வினாயக சதுர்த்தின்னி நெனச்சிக்கணும் சரியா..?

பிள்ளையார் சதுர்த்தியையும் கொழுக்கட்டையையும் யாராலும் பிரிக்க முடியாது.
அன்றைய சிறப்பே அதுதான். நம் வீடுகளில் வெகு இயல்பாய் அன்னிக்கு என்ன நடக்கும்..?


"ஏங்க..பிளையார் குடை, பிள்ளையார் வாங்கிட்டீங்களா."
"வாங்கியாச்சு.."
"பிள்ளையாருக்கு பட்டு துண்டு போடணும்.."
"போட்டுடலாம்.."
"கொழுக்கட்டைக்கு தேவையானதை வாங்கியாச்சா.."
"இதோ.."
"என்னென்ன வாங்கினீங்க..?"
"கொடுத்த லிஸ்ட்டை வாகியாச்சு.."
குடும்ப தலைவி சரிபார்க்கிறார்.
எள்ளு,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்,பொட்டு கடலை, வேர்கடலை, பட்டியல் தொடர்கிறது.
அடுத்து என்ன..?
ஒரு உரல்- ஒரு உலக்கை
தனி தனி பெயரும்- குணமும்-சுவையும் கொண்ட எல்லா பொருளும் உரலின் வயிற்றுக்குள் கொட்டப்பட்டுவிட்டது.
அம்மா உலைக்கையை தூக்கிவிட்டார்கள். வலது கை மாற்றி இடது கை.
இடது கை மாற்றி வலது கை."ஆச்..ஆச்.." என அவள் எது வரை இடிப்பாள்..?
உரலுக்குள் இட்ட ஒவ்வொரு தனிப்பொருளும் தம் தனி தன்மையை இழந்து- தனியான் சுவைதன்மையை இழக்கும் வரை குத்தவேண்டும் உலக்கையால்.

உலக்கையால் இடிபடுவது தண்டனை அல்லவா..?
ஆம் தண்டனைதான்...?
"நான் எள்ளு.."
"நான் தேங்காய்.."
என்று தம் த்னி தன்மையில் இறுமாப்பு கொள்கிற ஆணவத்திற்கு கிடைக்கிற தண்டனை
பல தனி பொருட்களை இப்படி உரலில் கொட்டி இடித்து உருவாவதும் ஒரு பொருள்தானே. அம்மா அதை எப்படி அழைக்கிறாள் தெரியுமா..?
"பூரணம்" என்கிறாள்.(absoluteness )
தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.
காரணப்பெயருடன் (பொட்டுடன் இருப்பதால் பொட்டுகடலை) இருந்த ஒவ்வொரு பொருளும் காரணமும் அழிந்து,பெயரும் அழிந்து, பூரணம் என்கிற தன்மை பெயருக்கு மாறிவிட்டது.

நம்மிடமும் சில தனி பொருட்கள் உண்டு-அவற்றை கூட்டுபொருளாக்கி-பூரணமடைய செய்யவேண்டும்.
உடல்-ஒரு பொருள்-அதற்கென தனிதன்மை- தொடு உணர்தல்.
கண் - பார்த்தல்- காது கேட்டல்-நாக்கு சுவைத்தல்- மூக்கு வாசம் உணர்தல்.

இந்தனிதன் தனிதன்மையினாலால் வாழ்கிறோம் நம் வாழ்வை.

இந்த தனிதன்மை பூரணப்படவேண்டும்.என்ன செய்வது..?
உரலில் இட்டு நசித்த மாதிரி புலன்களை இடிக்கவா முடியும்..? வேண்டாம்..நசிக்க வேண்டாம்..உணர்ந்தாலே போதும்.
உடல்-நாக்கு-கண்-மூக்கு-காது-மனம் ஆகியவை தம் த்னி தன்மையை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு ஆணவம் கொள்ளாமல் மற்ற புலன்களோடு பூரணப்படவேண்டும்.

உதாரணத்துக்கு
கண்- பார்த்தல் அதன்தொழில் எனில்
மற்ற புலனறிவையும் தன்னோடு அது பிணைத்துக்கொள்லுதல் வேண்டும். ஆம் பார்த்தல் மட்டுமன்றி., 
கண்களால் -உணர்தல்-கேட்டல்-சுவைத்தல்-ஆகியவற்றை செய்து பழகுதல் வேண்டும்.
ஒவ்வொரு புலனும் மனதோடு கலக்கும்போதுதான் பூரணப்படும் இல்லை எனில் அது அதன் தனி தன்னையோடு இருக்கும்.
இருட்டில் கிடக்கும் ஒன்றை கயிறு என உணர்ந்து அறிவு சொல்லாத வரை கண் அதை பாம்பாகவே காட்டிக்கொண்டிருக்கும். அதன் விளைவாக காதுகள் இல்லாத பாம்பின் சீறலை கேட்பதும், மூக்கு இல்லாத பாம்பின் வாசனையை உணர்வதும், உடல் பாம்பு தன்னை சீண்டுவதாக அச்சம்கொள்வதும்- வெகு சாதாரணமாக நடந்துவிடும். பூரணப்படுவதே வாழ்கை.

அப்பாடா..பூரணத்தை அம்மா இடித்துவிட்டிருக்கிறாள். 
உரல் நிறைய நிறைந்திருப்பது பூரணம். இடித்த அம்மா அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றுகிறாள். இப்போது பாத்திரத்தில் இருப்பதும் பூரணமே. அவள் கைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும் பூரணமே. எடுத்து போடுகையில் கொஞ்சமாய் கீழே சிந்திவிட்டது. அதுவும் பூரணமே. கீழே விழுந்ததில் சில துணுக்குகளை எறும்புகள் இழுத்து செல்கின்றன. அதுவும் பூரணமே.



ஆக பூரணமடைந்த பின் பூரணத்தின் ஒவ்வொரு பகுதியும் பூரணமே. 
பார்த்தீர்களா கட்டுரை பிள்ளையாரின் கொழுகட்டையில் துவங்கி பகவத் கீதையின் பூரண தத்துவத்துக்கு வந்துவிட்டது.
இப்போது ஒப்புகொள்கிறீர்களா இரண்டுக்கும் உள்ள தொடர்பை..?

கவிழ்த்து வைத்த உரல்தான் நம் கபாலம். வலதும் இடதுமாய் சிந்தித்து நம் உணர்வுகள் பயணிக்கும் முதுகு எலும்புதான் (தண்டுவடம்) உலக்கை.
கொழுக்கட்டை பூரணத்துக்கு உலக்கையை கீழ்னோக்கி இடிக்க வேண்டும்.
நம் மனதின் பூரணத்துக்கு மூலாதாரத்திலிருந்து கபாலத்தை நோக்கி மேல்னோக்கி குண்டலியின் துணையோடு இடிக்க வேண்டும்.
பூரணம் என்பது பொருளல்ல தன்மை- அடையப்படவேண்டிய தன்மை.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு
இதை மாற்றுவோம் 
எல்லாருமே ஒன்னு.
பூரணப்படுவோம். பூரணப்படுத்துவோம்.
 


   

Friday, February 20, 2009

ஞான விருந்து


வாழை இலையால் 
தோரணம் 
சாப்பிடத்தான் சோறில்லையே..

இது ஒரு பிரபலமான ஹைகூ.
சாப்பிட சோறில்லாத போது வாழைமரத்தால் தோரணம் கட்டுவதை கவிதை சொல்கிறது.
இன்றைய நமது கட்டுரையில் நாம் மிக சுவையான சங்கதிகளை பர்ர்க்கவிருக்கிறோம்.

மேலுள்ள கவிதையிலிருந்து- வாழை இலையையும் சாப்பிடுதலையும் மட்டும் எடுத்துக்கொண்டு நம் கட்டுரையில் பயணிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு அன்னை ஒருநிலைவரை-மிக அக்கறையாய் அமுதூட்டுவாள். குழந்தை வளர வளர அக்கறை அறிவுரையாய் மாறிபோகும். அறிவுரை அதட்டலாகும்.

நாம் வாழும் வாழ்க்கை என்பதே பார்த்து கற்றுக்கொள்ளும் பழக்கம் போலாகிவிட்டது.

நம்மில் நாம் நம் பிள்ளைகள் எத்தனை பேருக்கு சாப்பிடும் அறிவியல் பற்றி சொல்லி தந்திருக்கிறோம்.
"ஹே..சிந்தாம சாப்பிடு.."
"அள்ளி சாப்பிடு"
"மென்னுசாப்பிடு"
பல வீடுகளில் வழக்கமாக ஒலிக்கும் வார்த்தைகள்.
உணவே மருந்தாய்-மருந்தே உணவாய் உண்ணும் முறைக்கு இலக்கணம் வகுத்தவர்கள்..நம் தமிழ்முன்னோர்கள்.
"உணவெனப் படுவது
நிலமும் நீரும்.."-என்ற இலக்கணத்தை வகுத்த சமூகம் நம் சமூகம்.
ஆம் நம் உடல் என்பது
கொஞ்சம் நிலம்-கொஞ்சம் கார்ப்பரேஷன் நீர்-
நிலத்தை மேலும் பகுத்தால் கொஞ்சம் கோயம்பேடு மார்கெட்-கொஞ்சம் நாடார் கடை மளிகை.
மண்ணால் விளைந்ததை தின்று மண்ணுக்கே திரும்புகிறோம்.
நம்மவர்கள் பலனூறு ஆனண்டுகளுகு கண்ட உண்மையை நவீன் மருத்துவ அறிவியல் ரொம்ப தாமதமாய் இப்போதுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுமுறையும் சாப்பிடும் முறையும் என்று.

உணவுமுரைக்கு அடுததாக வருவோம். முதலில் சாப்பிடும் முறை.
எப்படி சாபிடுவது..?
"இதென்ன கேள்வி..கையால அள்ளிதான்..?"
அல்ல.நம் சாப்பிடும் முறை அப்படிப்பட்டதல்ல.அடிப்படையாய் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பசித்தால் சாபிடுகிறோம். பசியை உணரும் பகுதியாக வயிறு மட்டுமே குறிப்பிடப்படுவது மாபெரும் பிழை.
மனிதன்=உடல்+உயிர்+மனம்
காலம் கால்மாக உண்வை நாம உடலோடு மட்டுமே சம்மந்தப்படுத்திவிட்டோம். எல்லா கோளாறுகளுக்கும் இதுவே அடிப்படை காரணமாகிவிட்டது.
கண்ணுக்கு தெரிகிற உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத மனமும் உயிரும் உறைவதை நாம் மறந்துவிட்டோம்.
நம் புலன்கள்+உள்ளுறுப்புகள்+அங்கங்கள்+மனம் எல்லாவற்றுக்குமே பசிக்கிறது என்பதே உண்மை.

உடலுக்கு பசிக்கும்-வயிறு மட்டுமே உடல் அல்ல. நாம் சொல்வது மொத்த உடலுமே. வயிறு என்பது உணவை உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்கிற ஒரு சின்ன தொழிற்சாலை.
சாப்பிடும் எதிலிருந்தும் அது கால கால்மாக "குளுக்கோஸ்"என்கிற ஒரே பொருளை மட்டுமே  உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
சைவம்-அசைவம்-சைனிஸ்-இண்டெர்காண்டினெண்டல் எதுவானாலும் நம் தொழிற்சாலை குளுக்கோஸாக மட்டுமே பார்க்கும்.
உப்பு காரம் புளி இதெல்லாம் நாக்கின் முதல் ஒன்றரரை அங்குலம் வரைதான். தொண்டை குழிக்குப்போனாலே இனிப்பு கசப்பு காரம் துவர்ப்பு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.
உடலுக்கு பசிக்கும்
அன்றாடம் சுவைக்கும் நாக்கிற்கு பசிக்கும்.
கண்ணுக்கு பசிக்கும்.
நாசிக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
மனதுக்கு பசிக்கும்.
இந்த ஆறறிவு நிலைக்கும் உண்டாகும் பசியே உண்மையான பசி.
ஒவ்வொரு புலன்களுக்கும் உணவு பற்றிய அறிதல் இருக்கிறது. இட்லியை தோசை என்று சொல்லி தட்டில் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா..?

நாம் உண்கையில் இந்த ஆறறிவு புலன்களின் பசியும் தீர உண்ண வேண்டும்.
இது சாமான்யமான காரியம் இல்லை. ஆனால் சாத்த்யப்படுத்தினால் விளைவுகள் அற்புதம்.
சாப்பிடும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது. 
கவள உணவு வாய்க்குபோகிறது. வாயில் எச்சில் ஊறுகிறது. உணவு நாவில் பட்டதுமே உமிழ் நீர் சுரக்கிறது. மெல்லத் துவங்குகிறோம். உணவு அரைகிறது. விழுங்குகிறோம்.விழுங்கிய உணவோடு சுரந்த எச்சில் என்கிற சலைவா செரிமான தூதுவனாக வயிற்றுக்கு போகிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் உமிழ்நீரோடு விழுங்கப்ப்டாத உணவு பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவன் ஒரு நாட்டில் சுற்றுகிற மாதிரிதான் அது.
பாஸ்போர்ட் இல்லாதவனை ஒரு நாட்டு நிர்வாகம் என்ன செய்யம்..? சுதந்திரமாய் இயங்க விடாது.
பாஸ்போர்ட் இல்லாது உள் வரும் உணவை செரிமான மண்டலம் என்ன செய்யும்..? குளுக்கோஸாக மாற்றாமல் 
கொழுப்பாக மாற்றி..உடம்பில் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு அப்பிவிடும்.

சர்க்கரை நோய் என்கிற ஒரு எமனை இப்போது பத்து வயது பிள்ளைகளுக்கும் வருகிற சூழலை ஏற்படுத்திவிட்டோம். சர்க்கரை நோய் என்பதென்ன 'இன்சுலின்'குறைபாடு. இன்சுலின் என்பது நாம் மேலே சொன்ன நம் சொந்த வாயில் ஊறவேண்டிய உமிழ் நீர்.

தானாய் சுரக்க வேண்டியதை காசு கொடுத்து ஊசி மருந்தாக செலுத்த வேண்டிய அவலநிலைக்கு போய்விட்டோம்.
தமிழர்களின் சாப்பிடும் முறை எப்படிப்[பட்டது..?
வாருங்கள்..ஒரு த்மிழனின் வீட்டு விருந்துக்கு.
உட்காருங்கள்-கை அலம்பி ஆயிற்று- முதலில் பச்சை பசேலன வாழை இலைவரும்- த்ண்ணீர் தெளியுங்கள்.
பசிக்கும் கண்களால் அந்த பச்சை நிறத்தை கண்ணார பாருங்கள்.அடுத்து பச்சைனிற இலையின் மேல் contrast ஆக
வெள்ளை நிறத்தில் உப்பு வரும்-அடுத்து சிவந்த நிறத்தில் மாங்காயோ எதுவோ ஊறுகாய் வரும்-
அவியல்.துவையல்,பச்சடி,கூட்டு,பொரியல்,வருவல் இன்னும் எல்லாம் ஒவ்வொரு நிறத்தில்..
வைத்தவுடனே எடுத்து லபக்காமல்...ரசித்து பார்த்து "ஏ..கண்களே பாருங்கள் எத்தனை வகை உணவு."என சொல்லி கண்களின் பசியை தீர்க்க வேண்டும்.
அடுத்து..ஆவியடிக்கும் கிச்சடி சோறு-நெய்-பருப்பு-வாழை இலை அந்த சூட்டில் மிதமாய் வெந்து ஒருவகையான மருந்தை நமக்காக உற்பத்தி செய்யதுவங்கிவிட்டது.
இனி வேலை கைகளுக்க்தான்.மொத்த உடலுக்குமான பிரதினிதி இங்கு கைதான். சூடான சோற்றில் கைவைத்து அந்த சூட்டை உணர்ந்து உள்ளங்கைப்பட பிசையுங்கள். அந்த சூட்டை உணர்ந்தால்தான் வெளிஉடலின் பசி தீரும்.
இடையில் இன்னொருத்தர் தன் வேலையை துவங்கி இருப்பார்.திருவாளர் மூக்குதான். வாசம் பிடித்திருப்பார்.
இயன்றவரை ஒவ்வொரு கவள உணவை வாய்க்கு எடுத்து செல்லும்போதும் வாசத்தை உணருங்கள். அப்போதுதான் நாசியின் பசி தீரும்.
நாவில் வைத்ததும் நாக்கு சுவைக்கும்-பற்கள் மெல்லும்- மனம் அடுத்த கவளத்திற்கு ஆளாய் பறந்து மென்றும் மெல்லா நிலையில் உள்தள்ள பார்க்கும் அவசரம் வேண்டாம். நிதானமாக மெல்லுங்கள். அரைத்ததை முடிந்தவரை முன் வாய்க்கு கொண்டுவந்து மைய்ய அரையுங்கள், இது சலைவா இரண்டற கலக்க.
அரைக்கும்போதே அடுத்த ஆசாமி தன் வேலையை செய்து கொண்டிருப்பார். நாம்தான் இது நாள்வரை அதை உணரவில்லை. அரைக்கும் சப்தத்தை காதுகள் ரசித்துக்கொண்டிருக்கும்.
'லஜக்..லஜக்..'எனசாப்பிடுவர்களை நமக்கு பிடிப்பதில்லை.ஆனால் அந்த சத்தம் ரசிக்கப்பட்டல்தான் செவியின் பசி தீரும். நம்த்துப்போன அப்பளத்தை நாம் ஏன் விரும்புவதில்லை தெரியுமா..? அதை சாப்பிடும்போது எந்த ஓசையையும் உண்டாக்காதுதான். செவிக்கு ஒலி கேட்காததால் அப்பளம் சாப்பிட்ட நிறைவை அது மனதுக்கு தெரிவிக்காது.
எல்லா புலன்களும் திருப்தி அடைந்து-கடைசியில் தலைவர் மனம் சாப்பிட்ட திருப்திக்கு வருவார்.
இப்படி நாம் சாபிட முடியாமல் போனதற்கான புறத்தடைகள்-
டைனிங்க் டேபில்-டிவி-புத்தகம்-ஸ்பூன் கலாச்சாரம்-நேரமின்மை-தனி குடும்ப சூழல்
அகத் தடைகள்
அக்கறை இன்மை-நம் மீது நாமே காட்டவேண்டிய அன்பு பற்றிய விழிப்பின்மை.
வாழ்வை தவம் என்கிறோம். உண்பதால்தான் வாழ்கிறோம் எனில் உண்பதும் தவம்தானே.
தவமாய் உண்டு பழகினால் நோய் இல்லை.
வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாக தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவோம்.
நம் பிளளைகளுக்கு சாப்பிட கற்று தருவோம்.




.

Tuesday, February 17, 2009

கடவுளுக்கு இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்

1330 குறட்பாக்களில் செந்நாபோதன் கடவுளுக்காக சொன்னது 10 குறட்பாக்கள்தான்.ஆனால் அத்தனையும் முத்துகள்.

கடவுள்வாழ்த்து என்பது வெறும் வாழ்த்தாக மட்டும் அமையாமல்- கடவுளின் தன்மைக்கே இலக்கணமாக விளங்குகிறது என்பதே உண்மை.
வள்ளுவன்-இந்து-கிறிஸ்துவன்-இசுலாமியன்-சமணன்-இன்னு்ம் என்னென்ன சொன்னாலும் சரி அவன் அனைவருக்கமான கடவுளுக்கு இலக்கணம் வகுத்தவன்.

1.முதல் குறளில் உலகின் தோற்ற முதலுக்கு அவன் சொல்லும் மூலம்- ஆதி பகவன். நம்மிடம் எப்போதும் ஒரு குறை உண்டு-அதாவது யாராவது சொன்னதை அப்படியே தலை மீது வைத்துக்கொண்டு ஆடுவது. ஆயிரம் கருத்துகள் அலைமோதினாலும் மெய்பொருள் நோக்கியே இருக்க வேண்டும் நம் பயணம்.
நானேகூட ஏதோ சொல்கின்றேன்- நீங்கள் திடமான யோசனைக்கு பின்னரே அதை ஆமோதிப்பதோ அல்லது எதிர்ப்பதோ.

இந்த ஆதி பகவனைத்தான் வள்ளுவனின் தாய் ந்தை ஆக்கிவிட்டார்கள் நம்மவர்கள்.

கணிதம் படித்தவர்களுக்கு ஆதியை பற்றி கொஞ்சம் அதிகமாய் தெரியக்கூடும்.
வரைபடதாளில் இரண்டு அச்சுக்கோடுகள் வெட்டிக்கொள்ள மையமாய் வளர்வு நிலைக்கும் தேய்வு நிலைக்கும் அப்பாற்பட்டு சுழிய நிலையில் இருக்கும் புள்ளிக்கு ஆதி என்றுபெயர்.
ஆதியில் தோற்றமும் இல்லை.மறைவும் இல்லை.
ஆதியில் வளர்வும் இல்லை தேய்வும் இல்லை.
ஆதியில் இருளும் இல்லை ஒளியும் இல்லை.ஆனால் தோன்றாததும் மறையாததும்,வளராததும் தேயாததும்,இருளாத்தும் ஒளிராததுமான அனைத்துமே ஆதிக்குள் அடக்கம்.
இருளின் முடிவில் ஒளியின் துவக்கம். ஒளியின் முடிவில் இருளின் துவக்கம்.

அந்த ஆதிதான் கடவுள்.ஆம் அந்தாதிதான் கடவுள்.முடிவில் தொடக்கத்தையும்,தொடக்கத்தில் முடிவையும் பதுக்கி வைத்தவன்.

ஆதி நிலை என்பது ஒருமை நிலை. அங்கு சிந்தனையும் இல்லை செயலும் இல்லை. அடுத்த நிலையில் கடவுள் ஆதியை பகுக்கிறான். பகுப்பதால் அவன் பகவன். ஒன்றை இரண்டாக-இரண்டை மூன்றாக-பகுக்கிறான்.
இவ்வாறு சகலத்தையும் உள்ளடக்கிய ஆதியை பகுப்பதன் மூலம்- உலகின் தோற்ற முதலுக்கு அடிகோலுபவன் கடவுள்.
எனவே "ஆதி பகவன் முதற்றே உலகு"- என இலக்கணம் வகுத்தான்.

2. இரண்டாம் குறளில் வள்ளுவன் கடவுளுக்கு தரும் இன்னொரு பட்டம்"வாலறிவன்"- கடவுள் சாதாரண அறிவன் கிடையாது. அவன் வாலறிவன்.
வாலறிவன் என்றால் தூய அறிவு நிறைந்தவன். இல்லாமையையும், அறியாமையையும் விரட்டுவதே அறிவு சமுகத்தின்  தலையாய பணி.
அறியாமை என்பது அறியாத ஒன்றை அறிந்து கொள்வதன்று. தவறாக அறிந்து கொண்டதை சரியாக அறிந்துகொள்ளுதல்.
தவறான் ஒன்றை கற்றுக்கொண்ட பின்னரே சரியான் ஒன்றை அறிந்து கொள்வது மனித இயல்பு. அதுவே கற்றல்.
இருந்துகொண்டே மறைதலையும், மறைந்த படியே காட்டுதலையும் செய்யத்தலைபட்டவன் கடவுள். உலக இயக்கத்திற்கு இம்மாயத் தன்மை இன்றியமையாத ஒன்று. 
மெய்யை மெய்யாகவும்- பொய்யை பொயாகவும்-அறிந்து கொள்ள அந்த வாலறிவனை தொழுதலே கற்றலின் ஆய பயன்.

3.மலர்மிசை ஏகியவனின் மானடி சேர்ந்தால் நிலைசை நீடு வாழலாம்- இது குறள்பாடம். பேதம் அந்த மலர்மிசையை மகாவிஷ்ணுவிடம் எடுத்து சென்றுவிட்டது.
காரணம் அவனே மலர்மிசையில் உள்ளவன் என்பதால்.
மலர்மிசை என்பது ஒவ்வொரு மனிதரின் மனம் ஆகும். ஆயிரம் இதழ் விரித்த தாமரை என்கிறோமே அங்குதான் திண்ணமான எண்ணமாகவும், உறுதியான உணர்வாகவும் கடவுளை வைத்திருக்க்க முடியும்.
கடவுளை சட்டை பையில் வைத்துகொள்வதும், money purse இல் வைத்துகொள்வதும் என்பது வேறு.
கடவுள் மனித மனங்களில் ஏகியவன். அவனுடைய அடியை சேர்தல் சிறப்பு.
இங்கு அடிமுடி தேடிய கதையை நினைவு படுத்தி கொள்க.

4.வள்ளுவன் கடவுளுக்கு சொன்ன அடுத்த் தன்மை- "வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்". ஆதியை பகுத்தவனுக்கு உலகின் மேல் வேண்டுதலும் வேண்டாமையும் எப்படி இருக்க கூடும்.
பகவான் ரமணர் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் நீர் ஆவியாகும். சாமான்ய மனிதர் யார் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் ஆவியாகும். கடவுள் வாலறிவன் இல்லையா? தூய அறிவுக்கு ஏது விரு்ப்பும் வெறுப்பும்.
காந்தத்தோடு சேர்ந்த இரும்பு காந்தமாகிவிடும். வேண்டுதல் வேண்டாமை அற்றவனின் தாள் சேர்ந்தால் துன்பம் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற நிலையில் நாமும் கட்வுள் தன்மை எய்திவிடுகிறோம்.

5.ஆதி தன்மை என்பது நடுனிலை தன்மை. வரைபடத்தாளில் நடுனாயகமாய் அமர்ந்திருக்கும் கடவுள்- எந்த கால் பகுதி பற்றியும் ஏக்கமோ-தாக்கமோ கொள்வதில்லை. நல்லவை கெட்டவை போன்ற இருவினைகள் பால் சேராதவன் கடவுள். அதனால்தான் கீதையில் கிருஷ்ணனால் அப்படியிருக்க முடிந்தது.

6. பொறி வாயில் ஐந்தவித்தல் அடுத்த தன்மை. அப்ப்டி அவித்தால் பொய் தீர் ஒழுக்க நெறி நின்று- நீடு வாழலாம்.
கண் தன் மெய் தன்மையை பெறும் வரைக்கும்- கயிற்றை பாம்பாகவே காட்டி கொண்டிருக்கும். காது இறந்தகால ஓசையையும் எதிர்கால ஓசையையும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். நிகழ்கால செவிட்டு காதுகள் எல்லாம் கேட்காதுகள் அதாவது கேட்கா காதுகள். செவிகள் மெய் தன்மை பெறுகையில் எங்கும் ஒலிக்கும் பரநாதத்தை, விசுநாதத்தை கேட்கும்.
பொய் தீர்க்கும் ஒழுக்கம் என்பதே பொறிகளை அவித்தல்தான்.கடவுள் ஐந்தவித்தவன். அப்படி அவித்தால் நீங்களும் யாரும் கடவுளே. இங்கு கடவுளுக்கு உருவமோ பெயரோ கிடையாது. தன்மை மட்டுமே.

7.பதிலீடுகள் இல்லாதவன் கடவுள். அவன் ஒருவன் மட்டுமே. அதனால்தான் அவனுக்கு உவமை இல்லை. இதை வள்ளுவர் சொல்லும் பாங்கு அலாதியானது.
"தனக்கு உவமை இல்லாதான்"-என்கிறார். தன்னிலையில் வைத்து சொல்கிறார்.
முன்னிலையிலோ படர்க்கையிலோ சொல்லவில்லை. தனக்கு உவமை இல்லா நிலையில் த்ன்னை உருவாக்கி கொள்ளும் ஒவ்வொருவரும் கடவுளே.
தனக்கு உவமை இல்லா நிலையில் மனக்கவலைகள் ஏது?

8.கடவுளை சுட்ட வள்ளுவன் பயன்படுத்தும் அடுத்த வார்த்தையை கவனியுங்கள்.
"அறவாழி அந்தணன்..." பின்னொரு இடத்திலே சொல்லுவான் "அந்தணர் என்பவர் அறவோர்.."என்று. ஆக, கடவுள் என்பவன் அறத்தின் வழி நின்று வாழ்பவன். அறவாழியை அடைந்தால் பிறவாழியை எளிதில் நீந்தி கடக்கலாம். பிறவாழி நீந்த நீங்களும் அறவாழியாகும் தன்மையை பெறுங்கள் என சொல்லாமல் சொல்கிறான் வள்ளுவன்.

9.எட்டு குணங்களால் நிறைந்த இறைவனை வணங்காவிடில், கோளும் பொறியும் குணமற்று போய்விடும்.(இந்த எட்டு குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில் இட இருப்பதால் இங்கு சுருக்கமாக முடிக்கிறேன்) எட்டு குணம் என்பது அனைவராலும் அடையப்பட் கூடியதே.

10.பிறவியை அறுப்பவன் கடவுள். மெய்யறிவு பெறுபவன் மீண்டும் பிறக்க மாட்டான். இறைவனின் பாதம் தொட்டவர்கள் பிறவி கடல் கடப்பார்கள். மற்றவர்கள் அதிலேயே கிடப்பார்கள்.

கடவுளுக்கு என்று மேற்சொன்ன அத்துனை தன்மைகளையும் நாமும் பெற முனைவோம். முடிந்தால் முடியாததில்லை.

மனிதனின் ஆதி வியாதி


புண்ணிய தேசமாம் நம் பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகள் அல்ல உண்மையில் நடந்தேறியவை என நிறுவதை விட அந்த இதிகாச புராணங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் தர்க்க வாழ்வுக்கு தேவைப்படும் தத்துவ முத்துக்களை அனைவரும் அறிய கொட்ட வேண்டும் என்பது என் பேரவா.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கேற்ற தத்துவங்களை இதிகாசமாக்கினார்கள்.
அரிச்சந்திர புராணம்(பொய் இல்லை-புரட்டில்லை)
மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த யுகம் அது.
மனிதன் அரக்கர்களோடு மோதியது (பெண்ணாசைக்கு எதிரான போர்-இராமாயணம்)
மனிதன் மனிதனோடே மோதியது-மகாபாரதம்(மண்ணாசைக்கு எதிரான போர்)

இவைகளை கதைகளாக பார்க்கும் பக்குவமும், தத்துவங்களாக பார்க்கும் விசாரமும்,புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மனனிலைக்கு உட்பட்டது. 

அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் காண துடிப்பதும் அதையேதான்.
ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்க கூடும்.

படைப்புலகின் மிகப்பெரும் விலங்கு மனிதனே. அவனது ஆறாம் அறிவுக்கு காலம் இன்னும் நிறைய பதில்களை சொல்லத்தான் போகிறது.
எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உயிர், மனம், ஆன்மா இவற்றிற்காகத்தான் சொல்லப்பட்டன என்பது என் கருத்து.
நாளடைவில் அக்கதானாயகர்களுக்கு தனி மனிததுதி நடந்தேறியிருக்கலாம்.
ஆலயங்க்ளும் நிறுவப்பட்டிருக்கலாம்.

முதலில் இராமாயணத்தை எடுத்துகொள்வோம்
______________________________________________
பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம்." கண் இல்லாதவ்ர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கான கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று.
விஷயம் இதுதான்.
பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும்.
பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிட கூடும்.
பார்ர்க்கவும் முடியாமல்,பேசவும் முடியாமல்,கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டதக்கது.
இராமாயண கதையை ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன்.
"ஒரு ஊர்ல மூனு பேர் இருந்தாங்க. அதுல ரெண்டு பேரு ஆண், ஒரு பெண்.
ஒரு ஆம்பிளையோட் பேரு அறிவு. இன்னொருத்தன் ரு உடம்பு. அந்த பெண்ணோட் பேரு மனசு."
"இந்த மூனு பேரு சேந்து ஒரு நாள் பயணம் கிளம்பினாங்க. பயணம்னா சாதாரண பயணம் இல்ல ரொம்ப தூர பயணம். நடந்தே போனாங்க."
"நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிகிட்டே இருக்காங்க. திடீர்னு பார்த்தா பாதையே தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிகிடக்குது, இன்னொரு பக்கம் தண்ணியா ஓடுது. மூனு பேரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம் விழிக்கிறாங்க."
"அறிவு ஒரு பக்கம்  யாருக்கும் தொந்தரவு வராம போகணும்னு யோசிக்குது.
உடம்பு தனக்கு காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்ப்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு."
"அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுச்சி. அதை கேட்ட உடம்பு நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் 
உண்டாகும்னு சொல்லுச்சி. மன்சுகேக்கவே வேணாம் அந்த வழியில வரவே மாட்டேன்னு ஒரே அடம்."
"கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயை காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுல போகல்லம்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டங்க."
"அந்த பயணத்துல சோதனை மேல் சோதனை. மன்சு ஒரு பக்கம் போயிடுசி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத் பாடு பட்டுச்சி"
"அந்த அறிவுதான் ராமன்- உட்ம்புதான் லட்சுமணன்-மனசுதான் சீதை"
"மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம்.அறிவு சொல்வதை மனசு கேட்கணும்."
ராமன் பேரறிவு கடவுள். தம்பி லட்சுமணன் அவனை உடம்பு மாதிரி பிரியாதவன்.
சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவை திண்டாட வைத்த மனம்.
இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராக படையிலிட முடியும்.

மகாபாரதம்
________________
ஐந்து பேரு ஒரு பெண்ணொடு குடும்பம் நடத்தினாங்க.
அந்த ஐந்து பேரு யாரு..?- நம்மோட ஐந்து புலன்கள். ஐந்து புலன்கள் மனசோட சேர்ந்து வாழும்போது என்ன செய்யணும் என்ன செய்யகூடாது அப்படிங்கறதுதான் மகாபாரதம்.

உதாரணுத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி.
ராவணன் சீதயை தூக்கிட்டு போயிட்டான். ராமன் அல்லாட்றாரு.ஜடாயு ஒரு திசையை காட்டிட்டு செத்துடறாரு. அந்த திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்கு போனான். சீதையை பார்த்தான். கணையாழியை குடுத்தான். தன் நெஞ்சை தொறந்து காட்டினான். பத்தாத்துக்கு அந்த் இலங்கைக்கே தீ வச்சிட்டான்.

இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உனர வேண்டியிருக்கு.
ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். 
இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கபட்ட first party அப்படிங்கற முறையில சீதைதான் கொளுத்தணும். ரெண்டாவது வாய்ப்பு affectd party யின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கணும். கடைசி சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணன் எரிக்கலாம். ஏன்னா ரெண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..?

என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை.
அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். மாயை வசப்படுகையில் சீதையாகவும் ஆகிறோம்.
ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது.

சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரை கண்டிப்பாக தரிசித்து இருப்பார்கள். அந்த ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா?
"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்"
ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்'
ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். காமத்தை தீயிட்டு எரிப்பவன் அனுமன்.
அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு
இதிகாச பாத்த்ரங்களுக்கு கோவில் கட்டுவதை விட்டுவிட்டு மனதில் பிபற்ற துவங்கினால் நம் நாடும் வீடும் நலம் பெறும் என்பது அடியேனின் நம்பிக்கை.
காமமும் ஆசையும் வாசத்தின் மூலம் வரகூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை சுவாஸ்த்தை ஒழுங்குபடுத்துவத்ன் மூலம் அகற்றுகிறான்.
நம் உள்ளத்தில் ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் க்ட்டுவோம்.

 




Monday, February 16, 2009

நெற்றி மேல் வெற்றி


எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது முன்னோர் வாக்கு. அந்த சிரசில்தான் நுட்பமான எல்லா புலன்களும் அமைந்துள்ளன. அதுவும் நெற்றிக்கு இருக்கும் முக்கியத்துவம் சொல்லி மாளாது.

உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே
வச்ச பொருளின் வகை அறிவாரில்லை

மூலன் வாக்குப்படி அந்த பொருள் வைக்கப்பட்ட இடம் நெற்றிதான்.
அதனால்தான் மனித வாழ்வில் நெற்றிக்கு அப்படியொரு ராஜமரியாதை.
அப்படியென்ன பெரிய ராஜமரியாதைன்னு உங்களுக்கு கேக்கத்தோணும்.
மனித மனம் அங்குதான் ஒளிர்கிறது. ஒவ்வொருவரின் சுயமும் அங்குதான் தன்னை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மனித சிரசை கணினி என கொண்டால் நெற்றி அதன் திரை ஆகும்.
U-MATIC studio வில் தினமும் கனவை நாம் பார்ப்பது இந்த திரை வழிதான்.
நெற்றி ஒவ்வொரு மனிதனின் முகவரி சொல்லும் visiting card.
அங்கே திருனீரு பூசப்பட்டிருக்கலாம், வடகலையோ தென்கலையோ நாமமிடப்பட்டிருக்கலாம், தொழுகையின் நிமித்தம் கருப்பாய் தழும்பேறியிருக்கலாம் அல்லது சிலுவை குறியை தாங்கியிருக்கலாம், சந்தனம் குழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆக மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் இங்கிருந்தபடிதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

வணங்கும் முறைகள்
___________________
மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வணங்கும் முறைகளை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
மேற்கத்திய வணங்கும் முறை என்பது வலது கையை நெற்றிக்கு கொண்டுபோய்
"good morning" "goodevening"-சொல்வார்கள்.
வணக்கம் சொல்வதே நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக் காட்டுவதற்குதான்.
இசுலாமியர்களின் வணங்கும் முறை இதயம் இருக்கும் இடத்திற்கு கையை கொண்டு போய் அங்கிருந்து ஏதோ ஒன்றை எடுத்து செல்வது போல் சென்று 
நெற்றியில் கைவைத்து "வாலைக்கும் சலாம்"-என்பார்கள்.
நம் இந்தியாவில் வலது கையையும் இடது கையையும் ஒன்று சேர்த்து-இரண்டாக பிரிந்திருந்தேன் இப்போது ஒன்றாகிப்போனேன் என்பது போல் இரு கைகளையும் நெஞ்சுகு நேராய் இணைத்து அங்கிருந்து உயர்த்தி நெற்றிக்கு நேராய் வைத்து "வணக்கம்" "நமஸ்தே" "நமஸ்காரம்"-என்போம்.
தமிழர்களின் வணங்கும் முறை என்பது- இரு கைகளை ஒன்று சேர்த்துகுவித்து நெற்றிக்கும் மேல் உயர்த்தி தலை உச்சியில் வைத்து "உடலையும் தாண்டி தெய்வனிலையில் இருக்கிறேன்"என்பதாக "வணக்கம்" என்பார்கள்.
மனிதரை மனிதர் வணங்கும்போது நெற்றியின் உணர்வு பரிமாறிக்கொள்ளப்படுவது புரிந்திருக்கும்.

கடவுளை வணங்கும்போது
__________________________
மனிதன் கடவுளை வணங்கும்போதும் உடனடி மரியாதை பெறுவதும் சிரசும் நெற்றியும்தான்.
கோவில்லுக்கு போகிறீர்களா சாமி கும்பிட்டு முடித்ததும் சிரசுக்கு சடாரி,நெற்றிக்கு பிரசாதம். கோவில் குருக்களின் ஆசீர்வாதமும் நெற்றியைதொட்டே நிகழும்.
தேவாலயம் போகிறீர்களா..பிரார்த்தனை முடிந்ததும் போதகர் சிலுவையை வைத்து ஆசீர்திக்கும் இடம் நெற்றி.
மசூதிக்கு போகிறீர்களா அங்குள்ள இமாமும் நெற்றியில்தான் தம் உதடுகளை குவித்து ஊதுவார்.

வய்தில் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் போது கவனியுங்கள்- அவர்கள் காலில் விழுந்ததும் நம்மை ஆரத்தழுவி-தூக்கி நிறுத்தி-நெற்றியில் உச்சி முகர்ந்து-திருனீற்றை நெற்றியில் வைத்து "நல்லா இரு" என்பார்கள்.

நம் செயல்பாடுக்களுக்கு தேவையான மின்லம்(battery) நெற்றியில் இருப்பதை
நம் முன்னோர்கள் எவ்வளவு நாசூக்காக கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.
அந்த மின்கலம் எப்போதும் சார்ஜிலேயே இருக்க வேண்டும்.
அதனால்தான் அதன் மீது விபூதி,குங்கும,சந்தன பூச்சு. சிலுவை குறியீடு, தொழுகை நிமித்தம் பூமியில் நெற்றியை வைத்து தூண்டலை ஏற்படுத்துதல் எல்லாமே. 
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பி கருத்தறிவித்தே- என்று ஔவை கருத்தறிவிக்க சொன்ன இடம்தான் நெற்றி.
ஒருவகையில் பிங்கலை இடகலை சுழுமுனை புள்ளிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்றுகூட நாம் நெற்றியை குறிப்பிடலாம்.

மதங்களால் வேறுபட்டவர்கள் ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் உயிர்-உடல்-மன அளவீட்டில்-நெற்றியை அடிப்படையாக கொண்டு ஒரே மாதிரி செயல்படும் ஒருமைப்பாட்டு அமைப்பு புரிகிறதா.

மேலே நான் தந்திருக்கும் படமும் அதற்காகத்தான்.
அந்த மூன்று சின்னங்களுமே நான் குறிப்பிட்டதை போல நெற்றி மைய திரிவேணி சங்கமத்தை குறிப்பதாக உங்களால் பார்க்க முடிகிறதா..?

எனக்கு மிகவும்சுலபமாக இருக்கிறது.
சிலுவையை வளைத்தால் சூலமும்
சூலத்தை மடித்து நேராக்குகையில் சிலுவையும்.,அந்த பிறை நட்சத்திரமும் எனக்கு மனித நெற்றிகளின் சூட்சுமத்தை சொல்வதாகவே படுகிறது.