
உள் நுழையும் விழிகளுக்கு
Followers
About Me
- இது என் சங்கப்பலகை
- வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.
Saturday, February 28, 2009
உச்சந்தலையில் ஒரு வரைபடம்

Friday, February 27, 2009
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை



அடங்குவோம் - அடக்குவோம்

Wednesday, February 25, 2009
நினைவாற்றலின் அறிவியல்

--மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர்
இடம் உண்டு.
இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.
அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான
வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற
உரையாடல்களை கேட்கமுடியும்.
நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்
கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்க
தொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்
முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லி
அழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்
சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.
தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தை
நினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காக
அவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,
வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்கு
சகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பை
காலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து திரும்ப
மாட்டிக்கொள்ள உதவுகிறான்.
கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்கு
சென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்
கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்து
தந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.
எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.
நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடு
சம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசைய
வேண்டிய அவசியமும் இருக்கிறது.
நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்த
கருவியும் கிடையாது.
செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.
உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்
உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.
உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.
கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-
மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்
காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.
ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்
காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்
அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.
காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலை
நீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரண
FM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.
த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?
ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.
இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்
என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சில
விஷயங்கள்தான்.
இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்
இல்லை. உணர வேண்டும்.
நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.
1.கவனித்தல்.(Listening)
ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்
கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்
புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அது
அதன் அடுத்த படினிலைக்கு போகிறது.
2.பதிவு(Recording)
நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறது
தெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொரு
விந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு
80%எனில் பதிவு 40%தான்.
அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவு
செய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்
தண்டனையா எனவும் தெரியவில்லை.
3.இருப்பு வைத்தல்(Retaining)
கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாக
பொதிந்து வைக்கிறது.
பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்பு
வைப்பது எதற்காக..?
4.திரும்ப கேட்டல்(Recalling)
ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்
இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,
இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.
அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு
20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.
நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்
காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடை
புலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்
ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதே
நேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்
தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்
இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்
இயல்பே.
இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.
ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?
ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?
தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காக
படிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.
இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.
ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்
இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..
வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.
அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெ
கை குலுக்குகிறார்.
விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்
பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,
கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"
இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.
அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.
வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.
பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படி
இருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.
அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று.
"நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்
சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்
இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.
கவனியுங்கள்....கவனியுங்கள்....
Sunday, February 22, 2009
ஆடு பாம்பே..!




Saturday, February 21, 2009
கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்

அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்..? வழக்கமான கேள்விதான். ஆனால் இந்தக் கட்டுரை வழக்கமான கட்டுரை அல்ல.

"நான் தேங்காய்.."

Friday, February 20, 2009
ஞான விருந்து

Tuesday, February 17, 2009
கடவுளுக்கு இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்
மனிதனின் ஆதி வியாதி
.jpg)
Monday, February 16, 2009
நெற்றி மேல் வெற்றி

Sunday, February 15, 2009
ஆலயங்கள் அறிவியல் கூடங்களே..!

.jpg)
Saturday, February 14, 2009
பெரியாரை பிழையாமை பிழையே..!
தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும் பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,
Thursday, February 12, 2009
சிவ பெருமானே உன் சூலத்தை கொஞ்சம் கொடுப்பா
எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே என்பார் சிவானந்த பரமஹம்சர்.
Tuesday, February 10, 2009
கந்தனுக்கு...அரோகரா...!
பெங்களூரு ரமணியம்மாள் பாடியதை பலரும் கேட்டிருக்கிறோம்.
முருகனுக்கு பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிதூக்கி
ஆடுபவர்களையும் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் உணார்ந்து
ஆடுகிறொமா என்பதே கேள்வி.
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு.
பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.
நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமய்ங்கள் மட்டுமே
இருந்தன என ஒரு கருத்துண்டு.
அவ்வகையில்..நம் மண்ணில் ஆறுவகை சமயங்கள் உண்டு.
1.சிவனை வழிபடு தெய்வமாக கொண்ட.சைவம்(saivam)-இறைத்தன்மை ஒருமை நிலையில்
இருக்கும் நிலை.
2.சக்தியை வழிபடு தெய்வமாக் கொண்ட சாக்தம்(saaktham)-இருமை நிலை
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாக கொண்ட..வைணவம்(vainavam)-மும்மை நிலை.
4.பிரம்மாவை வழிபடு தெவமாக கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை.
5.விநாயகனை வழிபடு தெய்வமாக கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை.
6.முருகனை வழிபடு தெய்வமாக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை.
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையில் துவங்கி..ஆறாம் நிலைக்கு
உயர்வதே மனித வாழ்வு..
சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.
முருக நிலை என்பது அறிவும்,,விரிவும்.
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை.
பின்னது..கையில் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என அறியாத நிலை.
சிவனிலை என்பது உடலையும் சகலத்தையும் கடத்தல்.
முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.
முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம்
ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று.
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுகடவுளே முருகன்.
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம்
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில்
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது.
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம்.
ஒருவன் சாராயம் அருந்தினால்..சாக்கடையில் விழுவான்..
அவனுக்கு சாக்கடையில் இருக்கிறோம் எனவும் தெரியும்..நாற்றமடிக்கும்
அதிலிருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட
முடியாது.கார்ணம்..முகுளம் பாதிக்கப்படுவதே.
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும்
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய்
இருக்கிறது.
கண்கொண்டு பார்த்தால்..ஒரு பக்கம் ஏழ்மை..மறுபக்கம் வளமை.
இரண்டுக்கும் இடைப்பட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை.
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது.
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்..
கொஞ்சம் கண் மூடி பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல.
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான்.
in very simple words..kaavadi aattam is the balancing the thing in
between left and right.
வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து..
எதை எடுத்துகொள்வது..
எந்த பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான
அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்ப்புற மன பயிற்சிக்கான
வெளியில் நாம் வைத்திருக்கும் அடையாள சின்னமே காவடி ஆட்டம்.
இதற்கு தேவை விழிப்புணர்வு.
சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட
ஒரே கடவுள் முருகன் மட்டுமே.
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை.
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடி பழகுவோம்.
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம்
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம்.
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்புபூசமே.
அரோகரா.
Sunday, February 8, 2009
ஒரு சிலையின் கதை

ஒரு சிலையின் கதை
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். அவர ஆசிரியராக இருந்தார்.அதுவும் ஓவிய ஆசிரியராக இருந்தார். மனிதராக பிறந்த யாருக்குமே எதன் மீதாவது பற்று இருக்கும்.அதன் மீதே பித்தாக இருப்பார்கள். நம்முடைய ஆசிரியரும்..அப்படி ஒன்றின் மீது பித்தாக இருந்தார். ஆமாம்..அவருக்கு பாரதியார் பித்து.
ஆனந்தவிகடன் பத்திரிக்கை அவரை பற்றி கேள்விப்பட்டு..நிருபரை அனுப்பி அவரை பேட்டி எடுத்தது. அப்போது தன் பாரதி பித்துக்கு..அவர் சொன்ன விளக்க்ம்.."காரணம் தெரியல மகாக்கவி பாரதியை எனக்கு பிடிக்கும்.நான் எங்கும் எதிலும் பாரதியை பார்க்கிறேன்.."-என்று. அந்த பேட்டி வெளியான போதுதான்..இந்த உலகுக்கே தெரியும்..மாணவர்களை வைத்து..பாரதிக்காக அவர் பல நூறு ஓவிய கண்காட்சிகளை நடத்தியவர் என்று. அது மட்டுமல்ல..எண்ணற்ற ஓவிய ஆசிரியர்களையும்..உருவாக்கியவர் என்று..
இப்படியான அந்த ஓவிய ஆசிரியருக்கு திடீரென ஒரு ஆசை வந்தது. தனது ஊரில் பாரதிக்கு ஒரு சிலையை நிறுவி பார்க்கவேண்டுமென்று. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். அவர் நேரம் பாருங்கள்..அவரிடம் எப்போதோ படித்த ஒரு மாணவன் சிற்பியாகிய நிலையில் அவரை சந்திக்க..நெடு நாளுக்கு பிறகு குருவும் சிஷ்யனும் சந்தித்த அந்த நிகழ்வில்..சிலை பற்றிய பேச்சு பபிரதானமாகிவிட..தன் குருவுக்கு தன் வாழ்னாளில் ஏதாகிலும் செய்துவிட துடித்த அந்த மாணவன்...ஆசிரியரின் சிலைக்கான கனவை..சாத்தியமாக்குவதில் முனைந்தான்.
கண்ணகிக்கு..சிலலை எடுக்க ஒரு மன்னன்..எங்கிருந்தோ கல் கொண்டு வந்த்தாய் பாடத்தில் படித்தோமே..அதை போல பாரதியை வடிப்பதற்கான சிலைக்கு கல் கொண்டுவர..இருவரும் பயணப்பட்டார்கள். சித்திரம் பற்றி தெரிந்த ஆசிரியருக்கு சிலை பற்றி எதுவும் தெரியாததால்..எல்லா பொறுப்பையும் சிற்பியிடமே ஒப்புவித்தார்.கல் கிடைத்தது ஒரு கதை என்றால் அதை கொண்டடுவந்து சேர்க்க அவர்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.
சிற்பி கல்லை தன் வீட்டிற்கே கொண்டுவந்து விட்டார். நல்ல நாள் பார்த்து வேலை துவங்கியது. ஒரு முரட்டு கல்லுக்குள்..சகாப்தம் படைத்த ஒரு மகா கவியின் திரு உருவை கொண்டுவருவதில்..சிற்பி தவமாய் ஈடுபட்டார். சிற்பியின் ரத்த துளிகள் தெறித்து..தெறித்து..பாரதி படிப்படியாக உருக்கொண்டான்.
சிலையை எங்கே வைப்பது..? அடுத்த கேள்வி ஆசிரியருக்கு..அதிலும் ஒரு கனவு..அவருக்கு..தன் ஊரின் புகை வண்டி நிலயத்தில் எப்படியாவது நிறுவவேண்டும் என்று. கேள்விப்பட்டவர்கள் எல்லோரும்.."ஆ..அப்படியா..வைத்துவிடலாம்..இது ஒரு பெரும்சாதனை.."என ஆசிரியரை புகழ்ந்தார்கள்.
ஒரு டிசம்பர் மாதத்து நன்னாளில்..ஐம்பது..கவிஞர்கள்...பாரதியை பற்றி..எழுதிய..கவிதை புத்தகத்தையும்..வெளியிட்டு..பல தமிழ் அறிஞர்களை வர வைத்து..சிலைக்கான திறப்புவிழாவை..நடத்தி முடித்தார்.
சிலை திறப்புவிழா ஒரு உணர்வுபூர்வமான விழாவானது. வந்த அறிஞர்கள்..சிலையின் செய்நேர்த்தியில் சொக்கித்தான்போனார்கள்..விழா முடிந்து..அவரவர் அவரவர் வீடு திரும்பினார்கள்.
பாரதியும்..தான் நிறுவப்படும் நாள்வரை..அந்த ஆசிரியரின்..வீட்டில் இருக்கவேண்டி..திரும்பினார்.
நாள் ஆயிற்று..நாட்கள்..மாதமாயிற்று..மாதம் வருடங்கள் ஆயிற்று. பாரதி ஆசிரியர் வீட்டிலேயே...இன்னமும்.
கலையும்..இலக்கியமும்..கவிதையும்..மனிதனேயமும்..சமூக அக்கறையும் கைவந்த
ஆசிரியருக்கு அரசியல் வரவில்லை. எத்தனை அமைப்புகளிடம் முறையிட்டும்..,M.L.A. M.P...,மந்திரி..என்று எழுதாத மனு இல்லை செய்யாத முயற்சி இல்லை.
மகாகவியின் சிலை நிறுவப்பட்டபாடில்லை.
அந்த ஆசிரியர்: ஓவியக்கவி.வீரமணி., ஆசிரியர்..,இராமகிருஷ்ணா மேனிலைப்பள்ளி.
அந்த சிற்பி :ஜே.வி.சுரேஷ்.
அந்த ஊர் :செங்கல்பட்டு
சிலை நிறுவப்பட்ட ஆண்டு:2005..,டிசம்பர்
நடப்பாண்டு :2009
ஆக..கடந்த நான்கு வருடங்களாய்..ஆசிரியரே தம் வீட்டில் சிலைவடிவில் பூஜிக்கும் நிலை. தமிழ் ஆர்வலர் அனைவரும் எடுத்த பெரும் முயற்சிகளுக்கு இன்னும் பலன் கிட்டவில்லை.
அரசியல் ஒரு தடை..அதிகாரம் ஒரு தடை..!
அரசியலை காட்டி..அதிகாரம்..ஒதுங்க..அதிகாரத்தை காட்டி அரசியல் பதுங்க..
பாரதியின் நிலை பரிதாபம்.
அந்த மகாகவி வாழ்ந்தபோதும் நாம் கண்டுககொள்ளவில்லை.
உங்களில் யாரேனும்..உணர்வாளர்கள் இருந்தால்..
1. பாரதியை சென்று தரிசித்து வரலாம்..
2.இந்த செய்தியயை...மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
3.பலத்தை பிரயோகிக்க இயலுமெனில்..அரசியல்..அதிகாரரம்..ஏதாவது ஒரு மட்டத்தில் மோதி..சிலை நிறுவப்பட..உதவலாம்.
4.சகாப்தம் படைத்தவர்களுக்கும்..வணங்கப்படவேண்டியவர்களுக்கும்..சிலை எடுப்பது..தமிழர் நாகரிகம்.., அது தொடர வவேண்டுமனில்...செங்கை புகைவண்டி நிலையத்தில்..பாரதி சிலை சீக்கிரம் நிறுவப்பட வேண்டும்.
5.இது பல நூறு செங்கை மக்களின் உள்ளக்கிடக்கை.
6.மீண்டும் ஒரு முறை மேலே இருக்கும் அந்த சிலையில்..பாரதியின் ஆளுமையை பாருங்க்ள்.