உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Sunday, February 8, 2009

ஒரு சிலையின் கதை



ஒரு சிலையின் கதை

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். அவர ஆசிரியராக இருந்தார்.அதுவும் ஓவிய ஆசிரியராக இருந்தார். மனிதராக பிறந்த யாருக்குமே எதன் மீதாவது பற்று இருக்கும்.அதன் மீதே பித்தாக இருப்பார்கள். நம்முடைய ஆசிரியரும்..அப்படி ஒன்றின் மீது பித்தாக இருந்தார். ஆமாம்..அவருக்கு பாரதியார் பித்து.

ஆனந்தவிகடன் பத்திரிக்கை அவரை பற்றி கேள்விப்பட்டு..நிருபரை அனுப்பி அவரை பேட்டி எடுத்தது. அப்போது தன் பாரதி பித்துக்கு..அவர் சொன்ன விளக்க்ம்.."காரணம் தெரியல மகாக்கவி பாரதியை எனக்கு பிடிக்கும்.நான் எங்கும் எதிலும் பாரதியை பார்க்கிறேன்.."-என்று. அந்த பேட்டி வெளியான போதுதான்..இந்த உலகுக்கே தெரியும்..மாணவர்களை வைத்து..பாரதிக்காக அவர் பல நூறு ஓவிய கண்காட்சிகளை நடத்தியவர் என்று. அது மட்டுமல்ல..எண்ணற்ற ஓவிய ஆசிரியர்களையும்..உருவாக்கியவர் என்று..

இப்படியான அந்த ஓவிய ஆசிரியருக்கு திடீரென ஒரு ஆசை வந்தது. தனது ஊரில் பாரதிக்கு ஒரு சிலையை நிறுவி பார்க்கவேண்டுமென்று. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். அவர் நேரம் பாருங்கள்..அவரிடம் எப்போதோ படித்த ஒரு மாணவன் சிற்பியாகிய நிலையில் அவரை சந்திக்க..நெடு நாளுக்கு பிறகு குருவும் சிஷ்யனும் சந்தித்த அந்த நிகழ்வில்..சிலை பற்றிய பேச்சு பபிரதானமாகிவிட..தன் குருவுக்கு தன் வாழ்னாளில் ஏதாகிலும் செய்துவிட துடித்த அந்த மாணவன்...ஆசிரியரின் சிலைக்கான கனவை..சாத்தியமாக்குவதில் முனைந்தான்.

கண்ணகிக்கு..சிலலை எடுக்க ஒரு மன்னன்..எங்கிருந்தோ கல் கொண்டு வந்த்தாய் பாடத்தில் படித்தோமே..அதை போல பாரதியை வடிப்பதற்கான சிலைக்கு கல் கொண்டுவர..இருவரும் பயணப்பட்டார்கள். சித்திரம் பற்றி தெரிந்த ஆசிரியருக்கு சிலை பற்றி எதுவும் தெரியாததால்..எல்லா பொறுப்பையும் சிற்பியிடமே ஒப்புவித்தார்.கல் கிடைத்தது ஒரு கதை என்றால் அதை கொண்டடுவந்து சேர்க்க அவர்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

சிற்பி கல்லை தன் வீட்டிற்கே கொண்டுவந்து விட்டார். நல்ல நாள் பார்த்து வேலை துவங்கியது. ஒரு முரட்டு கல்லுக்குள்..சகாப்தம் படைத்த ஒரு மகா கவியின் திரு உருவை கொண்டுவருவதில்..சிற்பி தவமாய் ஈடுபட்டார். சிற்பியின் ரத்த துளிகள் தெறித்து..தெறித்து..பாரதி படிப்படியாக உருக்கொண்டான்.

சிலையை எங்கே வைப்பது..? அடுத்த கேள்வி ஆசிரியருக்கு..அதிலும் ஒரு கனவு..அவருக்கு..தன் ஊரின் புகை வண்டி நிலயத்தில் எப்படியாவது நிறுவவேண்டும் என்று. கேள்விப்பட்டவர்கள் எல்லோரும்.."ஆ..அப்படியா..வைத்துவிடலாம்..இது ஒரு பெரும்சாதனை.."என ஆசிரியரை புகழ்ந்தார்கள்.

ஒரு டிசம்பர் மாதத்து நன்னாளில்..ஐம்பது..கவிஞர்கள்...பாரதியை பற்றி..எழுதிய..கவிதை புத்தகத்தையும்..வெளியிட்டு..பல தமிழ் அறிஞர்களை வர வைத்து..சிலைக்கான திறப்புவிழாவை..நடத்தி முடித்தார்.

சிலை திறப்புவிழா ஒரு உணர்வுபூர்வமான விழாவானது. வந்த அறிஞர்கள்..சிலையின் செய்நேர்த்தியில் சொக்கித்தான்போனார்கள்..விழா முடிந்து..அவரவர் அவரவர் வீடு திரும்பினார்கள்.

பாரதியும்..தான் நிறுவப்படும் நாள்வரை..அந்த ஆசிரியரின்..வீட்டில் இருக்கவேண்டி..திரும்பினார்.

நாள் ஆயிற்று..நாட்கள்..மாதமாயிற்று..மாதம் வருடங்கள் ஆயிற்று. பாரதி ஆசிரியர் வீட்டிலேயே...இன்னமும்.

கலையும்..இலக்கியமும்..கவிதையும்..மனிதனேயமும்..சமூக அக்கறையும் கைவந்த

ஆசிரியருக்கு அரசியல் வரவில்லை. எத்தனை அமைப்புகளிடம் முறையிட்டும்..,M.L.A. M.P...,மந்திரி..என்று எழுதாத மனு இல்லை செய்யாத முயற்சி இல்லை.

மகாகவியின் சிலை நிறுவப்பட்டபாடில்லை.

அந்த ஆசிரியர்: ஓவியக்கவி.வீரமணி., ஆசிரியர்..,இராமகிருஷ்ணா மேனிலைப்பள்ளி.

அந்த சிற்பி :ஜே.வி.சுரேஷ்.

அந்த ஊர் :செங்கல்பட்டு

சிலை நிறுவப்பட்ட ஆண்டு:2005..,டிசம்பர்

நடப்பாண்டு :2009

ஆக..கடந்த நான்கு வருடங்களாய்..ஆசிரியரே தம் வீட்டில் சிலைவடிவில் பூஜிக்கும் நிலை. தமிழ் ஆர்வலர் அனைவரும் எடுத்த பெரும் முயற்சிகளுக்கு இன்னும் பலன் கிட்டவில்லை.

அரசியல் ஒரு தடை..அதிகாரம் ஒரு தடை..!

அரசியலை காட்டி..அதிகாரம்..ஒதுங்க..அதிகாரத்தை காட்டி அரசியல் பதுங்க..

பாரதியின் நிலை பரிதாபம்.

அந்த மகாகவி வாழ்ந்தபோதும் நாம் கண்டுககொள்ளவில்லை.

உங்களில் யாரேனும்..உணர்வாளர்கள் இருந்தால்..

1. பாரதியை சென்று தரிசித்து வரலாம்..

2.இந்த செய்தியயை...மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.

3.பலத்தை பிரயோகிக்க இயலுமெனில்..அரசியல்..அதிகாரரம்..ஏதாவது ஒரு மட்டத்தில் மோதி..சிலை நிறுவப்பட..உதவலாம்.

4.சகாப்தம் படைத்தவர்களுக்கும்..வணங்கப்படவேண்டியவர்களுக்கும்..சிலை எடுப்பது..தமிழர் நாகரிகம்.., அது தொடர வவேண்டுமனில்...செங்கை புகைவண்டி நிலையத்தில்..பாரதி சிலை சீக்கிரம் நிறுவப்பட வேண்டும்.

5.இது பல நூறு செங்கை மக்களின் உள்ளக்கிடக்கை.

6.மீண்டும் ஒரு முறை மேலே இருக்கும் அந்த சிலையில்..பாரதியின் ஆளுமையை பாருங்க்ள்.

1 comment:

  1. //அரசியலை காட்டி..அதிகாரம்..ஒதுங்க..அதிகாரத்தை காட்டி அரசியல் பதுங்க..//

    ம்ம்ம் ....இவை இரண்டுக்கும் நடுவில் சிலை பதுங்க.....என்று வரும் சிலைக்கு விடிவு காலம்???
    அன்புடன் அருணா

    ReplyDelete