உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Saturday, February 14, 2009

பெரியாரை பிழையாமை பிழையே..!



தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும் பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,
"ஒரு பிள்ளையார் சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய் கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.
"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு பாக்கலாம்" அப்ப்டின்னு.
எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.
சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது
அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க வேண்டியிருக்கிறது.
பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே 
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் 
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.
வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.

மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.
பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக கொண்டால் தீர்வு மிக எளிமை.
பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.
மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய் பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.
மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான் பார்க்கும்.
காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது மூலாதாரத்தில் இருந்துதான்.
ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது தெளிவு.
அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின் செயல்பாடேயன்றி வேறில்லை.
மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.
ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?
பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?
கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.? காரணத்தோடுதான் எலி.
உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.
தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.
 
மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட வை.
பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின் படி சிறு கொழுக்கட்டை.
அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும் ஆசைப்பட்டுவிடக்கூடாது.
எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை பார்க்கவேண்டும்.
முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.
முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.
இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?

மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும் மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.

நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?
ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிவியலாக்குவோம்.
பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி இல்லயேல் வீழ்ச்சி.


 

1 comment:

  1. நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து, வாழ்த்துக்கள்!

    ReplyDelete