உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Monday, February 16, 2009

நெற்றி மேல் வெற்றி


எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது முன்னோர் வாக்கு. அந்த சிரசில்தான் நுட்பமான எல்லா புலன்களும் அமைந்துள்ளன. அதுவும் நெற்றிக்கு இருக்கும் முக்கியத்துவம் சொல்லி மாளாது.

உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே
வச்ச பொருளின் வகை அறிவாரில்லை

மூலன் வாக்குப்படி அந்த பொருள் வைக்கப்பட்ட இடம் நெற்றிதான்.
அதனால்தான் மனித வாழ்வில் நெற்றிக்கு அப்படியொரு ராஜமரியாதை.
அப்படியென்ன பெரிய ராஜமரியாதைன்னு உங்களுக்கு கேக்கத்தோணும்.
மனித மனம் அங்குதான் ஒளிர்கிறது. ஒவ்வொருவரின் சுயமும் அங்குதான் தன்னை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மனித சிரசை கணினி என கொண்டால் நெற்றி அதன் திரை ஆகும்.
U-MATIC studio வில் தினமும் கனவை நாம் பார்ப்பது இந்த திரை வழிதான்.
நெற்றி ஒவ்வொரு மனிதனின் முகவரி சொல்லும் visiting card.
அங்கே திருனீரு பூசப்பட்டிருக்கலாம், வடகலையோ தென்கலையோ நாமமிடப்பட்டிருக்கலாம், தொழுகையின் நிமித்தம் கருப்பாய் தழும்பேறியிருக்கலாம் அல்லது சிலுவை குறியை தாங்கியிருக்கலாம், சந்தனம் குழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆக மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் இங்கிருந்தபடிதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

வணங்கும் முறைகள்
___________________
மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வணங்கும் முறைகளை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
மேற்கத்திய வணங்கும் முறை என்பது வலது கையை நெற்றிக்கு கொண்டுபோய்
"good morning" "goodevening"-சொல்வார்கள்.
வணக்கம் சொல்வதே நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக் காட்டுவதற்குதான்.
இசுலாமியர்களின் வணங்கும் முறை இதயம் இருக்கும் இடத்திற்கு கையை கொண்டு போய் அங்கிருந்து ஏதோ ஒன்றை எடுத்து செல்வது போல் சென்று 
நெற்றியில் கைவைத்து "வாலைக்கும் சலாம்"-என்பார்கள்.
நம் இந்தியாவில் வலது கையையும் இடது கையையும் ஒன்று சேர்த்து-இரண்டாக பிரிந்திருந்தேன் இப்போது ஒன்றாகிப்போனேன் என்பது போல் இரு கைகளையும் நெஞ்சுகு நேராய் இணைத்து அங்கிருந்து உயர்த்தி நெற்றிக்கு நேராய் வைத்து "வணக்கம்" "நமஸ்தே" "நமஸ்காரம்"-என்போம்.
தமிழர்களின் வணங்கும் முறை என்பது- இரு கைகளை ஒன்று சேர்த்துகுவித்து நெற்றிக்கும் மேல் உயர்த்தி தலை உச்சியில் வைத்து "உடலையும் தாண்டி தெய்வனிலையில் இருக்கிறேன்"என்பதாக "வணக்கம்" என்பார்கள்.
மனிதரை மனிதர் வணங்கும்போது நெற்றியின் உணர்வு பரிமாறிக்கொள்ளப்படுவது புரிந்திருக்கும்.

கடவுளை வணங்கும்போது
__________________________
மனிதன் கடவுளை வணங்கும்போதும் உடனடி மரியாதை பெறுவதும் சிரசும் நெற்றியும்தான்.
கோவில்லுக்கு போகிறீர்களா சாமி கும்பிட்டு முடித்ததும் சிரசுக்கு சடாரி,நெற்றிக்கு பிரசாதம். கோவில் குருக்களின் ஆசீர்வாதமும் நெற்றியைதொட்டே நிகழும்.
தேவாலயம் போகிறீர்களா..பிரார்த்தனை முடிந்ததும் போதகர் சிலுவையை வைத்து ஆசீர்திக்கும் இடம் நெற்றி.
மசூதிக்கு போகிறீர்களா அங்குள்ள இமாமும் நெற்றியில்தான் தம் உதடுகளை குவித்து ஊதுவார்.

வய்தில் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் போது கவனியுங்கள்- அவர்கள் காலில் விழுந்ததும் நம்மை ஆரத்தழுவி-தூக்கி நிறுத்தி-நெற்றியில் உச்சி முகர்ந்து-திருனீற்றை நெற்றியில் வைத்து "நல்லா இரு" என்பார்கள்.

நம் செயல்பாடுக்களுக்கு தேவையான மின்லம்(battery) நெற்றியில் இருப்பதை
நம் முன்னோர்கள் எவ்வளவு நாசூக்காக கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.
அந்த மின்கலம் எப்போதும் சார்ஜிலேயே இருக்க வேண்டும்.
அதனால்தான் அதன் மீது விபூதி,குங்கும,சந்தன பூச்சு. சிலுவை குறியீடு, தொழுகை நிமித்தம் பூமியில் நெற்றியை வைத்து தூண்டலை ஏற்படுத்துதல் எல்லாமே. 
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பி கருத்தறிவித்தே- என்று ஔவை கருத்தறிவிக்க சொன்ன இடம்தான் நெற்றி.
ஒருவகையில் பிங்கலை இடகலை சுழுமுனை புள்ளிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்றுகூட நாம் நெற்றியை குறிப்பிடலாம்.

மதங்களால் வேறுபட்டவர்கள் ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் உயிர்-உடல்-மன அளவீட்டில்-நெற்றியை அடிப்படையாக கொண்டு ஒரே மாதிரி செயல்படும் ஒருமைப்பாட்டு அமைப்பு புரிகிறதா.

மேலே நான் தந்திருக்கும் படமும் அதற்காகத்தான்.
அந்த மூன்று சின்னங்களுமே நான் குறிப்பிட்டதை போல நெற்றி மைய திரிவேணி சங்கமத்தை குறிப்பதாக உங்களால் பார்க்க முடிகிறதா..?

எனக்கு மிகவும்சுலபமாக இருக்கிறது.
சிலுவையை வளைத்தால் சூலமும்
சூலத்தை மடித்து நேராக்குகையில் சிலுவையும்.,அந்த பிறை நட்சத்திரமும் எனக்கு மனித நெற்றிகளின் சூட்சுமத்தை சொல்வதாகவே படுகிறது.





No comments:

Post a Comment