உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Friday, February 20, 2009

ஞான விருந்து


வாழை இலையால் 
தோரணம் 
சாப்பிடத்தான் சோறில்லையே..

இது ஒரு பிரபலமான ஹைகூ.
சாப்பிட சோறில்லாத போது வாழைமரத்தால் தோரணம் கட்டுவதை கவிதை சொல்கிறது.
இன்றைய நமது கட்டுரையில் நாம் மிக சுவையான சங்கதிகளை பர்ர்க்கவிருக்கிறோம்.

மேலுள்ள கவிதையிலிருந்து- வாழை இலையையும் சாப்பிடுதலையும் மட்டும் எடுத்துக்கொண்டு நம் கட்டுரையில் பயணிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு அன்னை ஒருநிலைவரை-மிக அக்கறையாய் அமுதூட்டுவாள். குழந்தை வளர வளர அக்கறை அறிவுரையாய் மாறிபோகும். அறிவுரை அதட்டலாகும்.

நாம் வாழும் வாழ்க்கை என்பதே பார்த்து கற்றுக்கொள்ளும் பழக்கம் போலாகிவிட்டது.

நம்மில் நாம் நம் பிள்ளைகள் எத்தனை பேருக்கு சாப்பிடும் அறிவியல் பற்றி சொல்லி தந்திருக்கிறோம்.
"ஹே..சிந்தாம சாப்பிடு.."
"அள்ளி சாப்பிடு"
"மென்னுசாப்பிடு"
பல வீடுகளில் வழக்கமாக ஒலிக்கும் வார்த்தைகள்.
உணவே மருந்தாய்-மருந்தே உணவாய் உண்ணும் முறைக்கு இலக்கணம் வகுத்தவர்கள்..நம் தமிழ்முன்னோர்கள்.
"உணவெனப் படுவது
நிலமும் நீரும்.."-என்ற இலக்கணத்தை வகுத்த சமூகம் நம் சமூகம்.
ஆம் நம் உடல் என்பது
கொஞ்சம் நிலம்-கொஞ்சம் கார்ப்பரேஷன் நீர்-
நிலத்தை மேலும் பகுத்தால் கொஞ்சம் கோயம்பேடு மார்கெட்-கொஞ்சம் நாடார் கடை மளிகை.
மண்ணால் விளைந்ததை தின்று மண்ணுக்கே திரும்புகிறோம்.
நம்மவர்கள் பலனூறு ஆனண்டுகளுகு கண்ட உண்மையை நவீன் மருத்துவ அறிவியல் ரொம்ப தாமதமாய் இப்போதுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுமுறையும் சாப்பிடும் முறையும் என்று.

உணவுமுரைக்கு அடுததாக வருவோம். முதலில் சாப்பிடும் முறை.
எப்படி சாபிடுவது..?
"இதென்ன கேள்வி..கையால அள்ளிதான்..?"
அல்ல.நம் சாப்பிடும் முறை அப்படிப்பட்டதல்ல.அடிப்படையாய் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பசித்தால் சாபிடுகிறோம். பசியை உணரும் பகுதியாக வயிறு மட்டுமே குறிப்பிடப்படுவது மாபெரும் பிழை.
மனிதன்=உடல்+உயிர்+மனம்
காலம் கால்மாக உண்வை நாம உடலோடு மட்டுமே சம்மந்தப்படுத்திவிட்டோம். எல்லா கோளாறுகளுக்கும் இதுவே அடிப்படை காரணமாகிவிட்டது.
கண்ணுக்கு தெரிகிற உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத மனமும் உயிரும் உறைவதை நாம் மறந்துவிட்டோம்.
நம் புலன்கள்+உள்ளுறுப்புகள்+அங்கங்கள்+மனம் எல்லாவற்றுக்குமே பசிக்கிறது என்பதே உண்மை.

உடலுக்கு பசிக்கும்-வயிறு மட்டுமே உடல் அல்ல. நாம் சொல்வது மொத்த உடலுமே. வயிறு என்பது உணவை உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்கிற ஒரு சின்ன தொழிற்சாலை.
சாப்பிடும் எதிலிருந்தும் அது கால கால்மாக "குளுக்கோஸ்"என்கிற ஒரே பொருளை மட்டுமே  உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
சைவம்-அசைவம்-சைனிஸ்-இண்டெர்காண்டினெண்டல் எதுவானாலும் நம் தொழிற்சாலை குளுக்கோஸாக மட்டுமே பார்க்கும்.
உப்பு காரம் புளி இதெல்லாம் நாக்கின் முதல் ஒன்றரரை அங்குலம் வரைதான். தொண்டை குழிக்குப்போனாலே இனிப்பு கசப்பு காரம் துவர்ப்பு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.
உடலுக்கு பசிக்கும்
அன்றாடம் சுவைக்கும் நாக்கிற்கு பசிக்கும்.
கண்ணுக்கு பசிக்கும்.
நாசிக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
மனதுக்கு பசிக்கும்.
இந்த ஆறறிவு நிலைக்கும் உண்டாகும் பசியே உண்மையான பசி.
ஒவ்வொரு புலன்களுக்கும் உணவு பற்றிய அறிதல் இருக்கிறது. இட்லியை தோசை என்று சொல்லி தட்டில் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா..?

நாம் உண்கையில் இந்த ஆறறிவு புலன்களின் பசியும் தீர உண்ண வேண்டும்.
இது சாமான்யமான காரியம் இல்லை. ஆனால் சாத்த்யப்படுத்தினால் விளைவுகள் அற்புதம்.
சாப்பிடும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது. 
கவள உணவு வாய்க்குபோகிறது. வாயில் எச்சில் ஊறுகிறது. உணவு நாவில் பட்டதுமே உமிழ் நீர் சுரக்கிறது. மெல்லத் துவங்குகிறோம். உணவு அரைகிறது. விழுங்குகிறோம்.விழுங்கிய உணவோடு சுரந்த எச்சில் என்கிற சலைவா செரிமான தூதுவனாக வயிற்றுக்கு போகிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் உமிழ்நீரோடு விழுங்கப்ப்டாத உணவு பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவன் ஒரு நாட்டில் சுற்றுகிற மாதிரிதான் அது.
பாஸ்போர்ட் இல்லாதவனை ஒரு நாட்டு நிர்வாகம் என்ன செய்யம்..? சுதந்திரமாய் இயங்க விடாது.
பாஸ்போர்ட் இல்லாது உள் வரும் உணவை செரிமான மண்டலம் என்ன செய்யும்..? குளுக்கோஸாக மாற்றாமல் 
கொழுப்பாக மாற்றி..உடம்பில் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு அப்பிவிடும்.

சர்க்கரை நோய் என்கிற ஒரு எமனை இப்போது பத்து வயது பிள்ளைகளுக்கும் வருகிற சூழலை ஏற்படுத்திவிட்டோம். சர்க்கரை நோய் என்பதென்ன 'இன்சுலின்'குறைபாடு. இன்சுலின் என்பது நாம் மேலே சொன்ன நம் சொந்த வாயில் ஊறவேண்டிய உமிழ் நீர்.

தானாய் சுரக்க வேண்டியதை காசு கொடுத்து ஊசி மருந்தாக செலுத்த வேண்டிய அவலநிலைக்கு போய்விட்டோம்.
தமிழர்களின் சாப்பிடும் முறை எப்படிப்[பட்டது..?
வாருங்கள்..ஒரு த்மிழனின் வீட்டு விருந்துக்கு.
உட்காருங்கள்-கை அலம்பி ஆயிற்று- முதலில் பச்சை பசேலன வாழை இலைவரும்- த்ண்ணீர் தெளியுங்கள்.
பசிக்கும் கண்களால் அந்த பச்சை நிறத்தை கண்ணார பாருங்கள்.அடுத்து பச்சைனிற இலையின் மேல் contrast ஆக
வெள்ளை நிறத்தில் உப்பு வரும்-அடுத்து சிவந்த நிறத்தில் மாங்காயோ எதுவோ ஊறுகாய் வரும்-
அவியல்.துவையல்,பச்சடி,கூட்டு,பொரியல்,வருவல் இன்னும் எல்லாம் ஒவ்வொரு நிறத்தில்..
வைத்தவுடனே எடுத்து லபக்காமல்...ரசித்து பார்த்து "ஏ..கண்களே பாருங்கள் எத்தனை வகை உணவு."என சொல்லி கண்களின் பசியை தீர்க்க வேண்டும்.
அடுத்து..ஆவியடிக்கும் கிச்சடி சோறு-நெய்-பருப்பு-வாழை இலை அந்த சூட்டில் மிதமாய் வெந்து ஒருவகையான மருந்தை நமக்காக உற்பத்தி செய்யதுவங்கிவிட்டது.
இனி வேலை கைகளுக்க்தான்.மொத்த உடலுக்குமான பிரதினிதி இங்கு கைதான். சூடான சோற்றில் கைவைத்து அந்த சூட்டை உணர்ந்து உள்ளங்கைப்பட பிசையுங்கள். அந்த சூட்டை உணர்ந்தால்தான் வெளிஉடலின் பசி தீரும்.
இடையில் இன்னொருத்தர் தன் வேலையை துவங்கி இருப்பார்.திருவாளர் மூக்குதான். வாசம் பிடித்திருப்பார்.
இயன்றவரை ஒவ்வொரு கவள உணவை வாய்க்கு எடுத்து செல்லும்போதும் வாசத்தை உணருங்கள். அப்போதுதான் நாசியின் பசி தீரும்.
நாவில் வைத்ததும் நாக்கு சுவைக்கும்-பற்கள் மெல்லும்- மனம் அடுத்த கவளத்திற்கு ஆளாய் பறந்து மென்றும் மெல்லா நிலையில் உள்தள்ள பார்க்கும் அவசரம் வேண்டாம். நிதானமாக மெல்லுங்கள். அரைத்ததை முடிந்தவரை முன் வாய்க்கு கொண்டுவந்து மைய்ய அரையுங்கள், இது சலைவா இரண்டற கலக்க.
அரைக்கும்போதே அடுத்த ஆசாமி தன் வேலையை செய்து கொண்டிருப்பார். நாம்தான் இது நாள்வரை அதை உணரவில்லை. அரைக்கும் சப்தத்தை காதுகள் ரசித்துக்கொண்டிருக்கும்.
'லஜக்..லஜக்..'எனசாப்பிடுவர்களை நமக்கு பிடிப்பதில்லை.ஆனால் அந்த சத்தம் ரசிக்கப்பட்டல்தான் செவியின் பசி தீரும். நம்த்துப்போன அப்பளத்தை நாம் ஏன் விரும்புவதில்லை தெரியுமா..? அதை சாப்பிடும்போது எந்த ஓசையையும் உண்டாக்காதுதான். செவிக்கு ஒலி கேட்காததால் அப்பளம் சாப்பிட்ட நிறைவை அது மனதுக்கு தெரிவிக்காது.
எல்லா புலன்களும் திருப்தி அடைந்து-கடைசியில் தலைவர் மனம் சாப்பிட்ட திருப்திக்கு வருவார்.
இப்படி நாம் சாபிட முடியாமல் போனதற்கான புறத்தடைகள்-
டைனிங்க் டேபில்-டிவி-புத்தகம்-ஸ்பூன் கலாச்சாரம்-நேரமின்மை-தனி குடும்ப சூழல்
அகத் தடைகள்
அக்கறை இன்மை-நம் மீது நாமே காட்டவேண்டிய அன்பு பற்றிய விழிப்பின்மை.
வாழ்வை தவம் என்கிறோம். உண்பதால்தான் வாழ்கிறோம் எனில் உண்பதும் தவம்தானே.
தவமாய் உண்டு பழகினால் நோய் இல்லை.
வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாக தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவோம்.
நம் பிளளைகளுக்கு சாப்பிட கற்று தருவோம்.




.

2 comments:

  1. நண்பரே இரண்டு தவறுகள் விஞ்ஞானரீதியாக.
    உணவு பெரும்பாலும் க்ளூகோஸ் ஆக்கினாலும் எண்ணை வேறு ரூபத்தில் பயனாகிறது.
    சலைவாவில் இன்சுலின் இல்லை. பான்கிரியாஸ் அதை ¨சுரந்து¨ இரத்தத்தில் கலக்கிறது.

    ReplyDelete
  2. //வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாக தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவோம்.//

    அதன் ஆனந்தமே அலாதிதான்....நல்ல பதிவு.
    அன்புடன் அருணா

    ReplyDelete