உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Saturday, February 21, 2009

கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்


அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்..? வழக்கமான கேள்விதான். ஆனால் இந்தக் கட்டுரை வழக்கமான கட்டுரை அல்ல.
ஏதோ ஓர் நாளில் இந்த உலகம் இல்லாமல்தான் இருந்தது. அதுபோலவே ஓர் நாளில் இல்லாமலும் போகக்கூடும்.
 இடையில்  நடந்துகொண்டிருப்பது சிறு விளையாட்டே. விளயாட்டின் நிமித்தம்  நமக்கு கிடைத்திருப்பது..நாகரீகம்.,மொழி,சமயம்,மதம்,அறிவியல்,சித்தாந்தங்கள்.இதுவும் ஒரு நாள் இல்லாமல் போகக்கூடும் அல்லது தன் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மக்களின் இசைவோடு மாறக்கூடும்.
எந்த வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்படாத பல நூறுவகையான கடவுளர்கள் அனுதினமும் உருவாகிக்கொண்டே உள்ளனர்.

வீதியோரத்து "லக்கி பிள்ளையார் "முதல் "வழித்துணை அம்மன்" வரை நம் தனிப்பட்ட விருப்புகளை தெய்வத்தின்மேல் செலுத்தி வருவதாகத்தான் தோணுகிறது எனக்கு. கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை மீறி நாம் கற்றுக்கொள்ள பாடம் செய்யப்பட்ட குறியீட்டு பாடங்களாய் அவர்கள் இருப்பதாக நம்புபவன் நான்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையும் மலர்கிறது.

கொழுக்கட்டை- காலம் கால்மாக வினாயக சதுர்த்தி அன்று நாம் படையிலிட்டு வருகிற ஒரு தின் பண்டம். கீதை மகாபாரதத்தின் அங்கமாய் கிருஷ்ணர் அருளிய ஞானப்பொக்கிஷம்.

இவை இரண்டுக்கும் நிகழ்வின் அடிப்படையில் தொடர்பு தேடாமல் பொருளின் அடிபடையில் தொடர்பு தேடிய முயற்சியே இக்கட்டுரை.

மனிதனுக்கு இருக்கும் ஒரே வசதி- கண்களை மூடி நினைத்தால் நினைத்த பொருளை அகக் கண் காட்டும். அதுதான் நெற்றி இருக்கே பளிச்சுனு படம்போட்டு காடறதுக்கு.., இப்ப நீங்க என்ன செய்யணும்னா இன்னிக்கு வினாயக சதுர்த்தின்னி நெனச்சிக்கணும் சரியா..?

பிள்ளையார் சதுர்த்தியையும் கொழுக்கட்டையையும் யாராலும் பிரிக்க முடியாது.
அன்றைய சிறப்பே அதுதான். நம் வீடுகளில் வெகு இயல்பாய் அன்னிக்கு என்ன நடக்கும்..?


"ஏங்க..பிளையார் குடை, பிள்ளையார் வாங்கிட்டீங்களா."
"வாங்கியாச்சு.."
"பிள்ளையாருக்கு பட்டு துண்டு போடணும்.."
"போட்டுடலாம்.."
"கொழுக்கட்டைக்கு தேவையானதை வாங்கியாச்சா.."
"இதோ.."
"என்னென்ன வாங்கினீங்க..?"
"கொடுத்த லிஸ்ட்டை வாகியாச்சு.."
குடும்ப தலைவி சரிபார்க்கிறார்.
எள்ளு,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்,பொட்டு கடலை, வேர்கடலை, பட்டியல் தொடர்கிறது.
அடுத்து என்ன..?
ஒரு உரல்- ஒரு உலக்கை
தனி தனி பெயரும்- குணமும்-சுவையும் கொண்ட எல்லா பொருளும் உரலின் வயிற்றுக்குள் கொட்டப்பட்டுவிட்டது.
அம்மா உலைக்கையை தூக்கிவிட்டார்கள். வலது கை மாற்றி இடது கை.
இடது கை மாற்றி வலது கை."ஆச்..ஆச்.." என அவள் எது வரை இடிப்பாள்..?
உரலுக்குள் இட்ட ஒவ்வொரு தனிப்பொருளும் தம் தனி தன்மையை இழந்து- தனியான் சுவைதன்மையை இழக்கும் வரை குத்தவேண்டும் உலக்கையால்.

உலக்கையால் இடிபடுவது தண்டனை அல்லவா..?
ஆம் தண்டனைதான்...?
"நான் எள்ளு.."
"நான் தேங்காய்.."
என்று தம் த்னி தன்மையில் இறுமாப்பு கொள்கிற ஆணவத்திற்கு கிடைக்கிற தண்டனை
பல தனி பொருட்களை இப்படி உரலில் கொட்டி இடித்து உருவாவதும் ஒரு பொருள்தானே. அம்மா அதை எப்படி அழைக்கிறாள் தெரியுமா..?
"பூரணம்" என்கிறாள்.(absoluteness )
தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.
காரணப்பெயருடன் (பொட்டுடன் இருப்பதால் பொட்டுகடலை) இருந்த ஒவ்வொரு பொருளும் காரணமும் அழிந்து,பெயரும் அழிந்து, பூரணம் என்கிற தன்மை பெயருக்கு மாறிவிட்டது.

நம்மிடமும் சில தனி பொருட்கள் உண்டு-அவற்றை கூட்டுபொருளாக்கி-பூரணமடைய செய்யவேண்டும்.
உடல்-ஒரு பொருள்-அதற்கென தனிதன்மை- தொடு உணர்தல்.
கண் - பார்த்தல்- காது கேட்டல்-நாக்கு சுவைத்தல்- மூக்கு வாசம் உணர்தல்.

இந்தனிதன் தனிதன்மையினாலால் வாழ்கிறோம் நம் வாழ்வை.

இந்த தனிதன்மை பூரணப்படவேண்டும்.என்ன செய்வது..?
உரலில் இட்டு நசித்த மாதிரி புலன்களை இடிக்கவா முடியும்..? வேண்டாம்..நசிக்க வேண்டாம்..உணர்ந்தாலே போதும்.
உடல்-நாக்கு-கண்-மூக்கு-காது-மனம் ஆகியவை தம் த்னி தன்மையை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு ஆணவம் கொள்ளாமல் மற்ற புலன்களோடு பூரணப்படவேண்டும்.

உதாரணத்துக்கு
கண்- பார்த்தல் அதன்தொழில் எனில்
மற்ற புலனறிவையும் தன்னோடு அது பிணைத்துக்கொள்லுதல் வேண்டும். ஆம் பார்த்தல் மட்டுமன்றி., 
கண்களால் -உணர்தல்-கேட்டல்-சுவைத்தல்-ஆகியவற்றை செய்து பழகுதல் வேண்டும்.
ஒவ்வொரு புலனும் மனதோடு கலக்கும்போதுதான் பூரணப்படும் இல்லை எனில் அது அதன் தனி தன்னையோடு இருக்கும்.
இருட்டில் கிடக்கும் ஒன்றை கயிறு என உணர்ந்து அறிவு சொல்லாத வரை கண் அதை பாம்பாகவே காட்டிக்கொண்டிருக்கும். அதன் விளைவாக காதுகள் இல்லாத பாம்பின் சீறலை கேட்பதும், மூக்கு இல்லாத பாம்பின் வாசனையை உணர்வதும், உடல் பாம்பு தன்னை சீண்டுவதாக அச்சம்கொள்வதும்- வெகு சாதாரணமாக நடந்துவிடும். பூரணப்படுவதே வாழ்கை.

அப்பாடா..பூரணத்தை அம்மா இடித்துவிட்டிருக்கிறாள். 
உரல் நிறைய நிறைந்திருப்பது பூரணம். இடித்த அம்மா அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றுகிறாள். இப்போது பாத்திரத்தில் இருப்பதும் பூரணமே. அவள் கைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும் பூரணமே. எடுத்து போடுகையில் கொஞ்சமாய் கீழே சிந்திவிட்டது. அதுவும் பூரணமே. கீழே விழுந்ததில் சில துணுக்குகளை எறும்புகள் இழுத்து செல்கின்றன. அதுவும் பூரணமே.



ஆக பூரணமடைந்த பின் பூரணத்தின் ஒவ்வொரு பகுதியும் பூரணமே. 
பார்த்தீர்களா கட்டுரை பிள்ளையாரின் கொழுகட்டையில் துவங்கி பகவத் கீதையின் பூரண தத்துவத்துக்கு வந்துவிட்டது.
இப்போது ஒப்புகொள்கிறீர்களா இரண்டுக்கும் உள்ள தொடர்பை..?

கவிழ்த்து வைத்த உரல்தான் நம் கபாலம். வலதும் இடதுமாய் சிந்தித்து நம் உணர்வுகள் பயணிக்கும் முதுகு எலும்புதான் (தண்டுவடம்) உலக்கை.
கொழுக்கட்டை பூரணத்துக்கு உலக்கையை கீழ்னோக்கி இடிக்க வேண்டும்.
நம் மனதின் பூரணத்துக்கு மூலாதாரத்திலிருந்து கபாலத்தை நோக்கி மேல்னோக்கி குண்டலியின் துணையோடு இடிக்க வேண்டும்.
பூரணம் என்பது பொருளல்ல தன்மை- அடையப்படவேண்டிய தன்மை.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு
இதை மாற்றுவோம் 
எல்லாருமே ஒன்னு.
பூரணப்படுவோம். பூரணப்படுத்துவோம்.
 


   

1 comment: