உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Sunday, February 15, 2009

ஆலயங்கள் அறிவியல் கூடங்களே..!





கலிகாலத்தில் நமக்கெல்லாம் ஆலயப்பிரவேசமென்பது புத்தாண்டுக்கு,பொங்கலுக்கு,இன்னும் பிற விஷேச வைபவ நாளில் என்று மட்டுமே சுருங்கிப்போய்விட்டது.
அதுவும் இன்றைய வளரும் தலைமுறையினருக்கு கோவில்கள் என்றாலே எதுவோ போகக்கூடாத இடத்துக்கு போகிற மாதிரி அப்படி ஒரு வேதனை. மனித அறிவுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்றை செய்வதுபோல் ஒரு பாவனை.
இவையெல்லாம் ஏன் என வினாவை எழுப்பி பார்த்தால் தவறு உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.ஆம்..விவரங்களை மிக சரியாக நாம் தர தவறியதுதான் இளைய தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தின் மேலும் பண்பாட்டின்மேலும் நம்பிக்கை வராமல் போனதற்கான் காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளிமாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சியை தரும் பயிலரங்கை நடத்தி வருகிறேன். அந்த சமயங்களில் நான் மாணவார்களை பார்த்து கேட்பதுண்டு.."புத்தருக்கு ஞானத்தை தந்த மரம் எது..?"
உடனே மானவர்கள் சொல்லிவிடுவார்கள் "போதி மரம்"என்று.
அடுத்து நான் கேட்பேன்"இந்தியாவில் போதி மரங்கள் உள்ளனவா..தமிழ்னாட்டில்
 போதி மரங்கள் உள்ளனவா..? நீங்கள் போதி மரத்தை பார்த்ததுண்டா.." என்று
 யாரிடமிருந்தும் பதிலே வராது.
அவர்களைப் பொறுத்தவரை போதி மரம் என்பது ஏதோ சொர்கத்தில் மட்டுமே இருக்கும் ஒரு மரம் எனும் எண்ணம்.
உண்மையில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசமரம்தான் போதி மரம் என்பது பல ஆசிரியர்களுக்கே தெரியாத நிலையை நான் கண்டிருகிறேன்.
மரங்களில் அது அரசன் என்பதால் அரசமரம் ஆயிற்று. அந்த மரமே அரச நிலையிலிருந்து வந்த புத்தருக்கு ஞானம் போதிததால் போதி மரம் ஆயிற்று.
அது ஏன் மரங்களில் அரசன்?
photosynthesis என்கிற ஒளிசேர்க்கையை 24 மணி
நேரத்துக்கும் நிகழ்த்தக்கூடிய ஒரே மரம் அரசமரம். அதாவது மனிதனுக்கு தேவையான் பிராண வாயுவை தொடர்ந்து  உற்பத்தி செய்யும் மரம் அரசமரம்.
மற்றவையெல்லாம் சூரியன் மறைந்ததும் ஒளி சேர்க்கையை நிறுத்திவிடும்.
அதனால்தான் ஸ்தல விருட்சங்கள் என்கிற பெயரில் ஆலய்ங்களில் அரசமரத்தையும் அதன் குணம் ஒத்த மற்ற மரங்க்ளையும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள்.
அரசமரத்தின் கதையே தெரியாவிட்டால் அதன் கிழே வைக்கப்பட்டிருக்கும் நாகலின் கதை என்னவென்று தெரியும்.
அந்த கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி வைத்தாயிற்று. இளம் சமூகம் எப்படி நம்பும்..?
மேலே அந்த நாகலின் படத்தை தந்திருக்கிறேன்,
இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிய நிலையில் உச்சியில் ஒரு சிவலிங்கத்தை கவ்வி பிடித்திருக்கிறது.
இதை நாம் ஏன் வணங்கவேண்டும்? இதை வணங்கினால் மகப்ப்பேறு எப்படி உருவாகும்..?
முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல்ர்.
நவீன அறிவியல் மிக சமீபமாய் கண்டு சொன்ன (genetics) மரபியலை அன்றே சொல்லி வைத்ததற்கான சாட்சி இந்த நாகல்.
இந்த நாகல்லின் படத்தை வேறு மாதிரி சாய்த்து வைத்த நிலையில் நம் பிள்ளைகள் டி,என்.ஏ. என்று அறிவியல் பாடத்தில் படிக்கிறார்கள்.
நேர்மறை மற்றும் எதிர்மறையாக செயல்படும் மரபணுகூறின் வடிவத்தை இப்படி கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த கல்லை வெளியில் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்று தப்பிதமாக நாம் செய்து வருகிறோம். நாம் உணர வேண்டியது உள்ளுக்குள் டி.என்.ஏ. சுழலுவதில் மாற்றம் வேண்டும் என்பதே .
உடற்கூறியல் கோளாறுகளுக்கும் சுவாசத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
அதனால்தான் அந்த கல்லை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்து வலம் செய்ய வைதார்கள்.
தூய்மையான ஆக்ஸிஜன் உள்ள வெளியை கொஞ்ச நேரம் சுற்றி வந்தாலே
 மனமும் உடலும் தெளிவாகிவிடும்.
கோவிலுக்கு போனதும் மனம் தெளிகிற மாயை,பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாய் தோணுதல் போன்றவை எல்லாம்..இந்த தூய காற்று டி.என்.ஏ. அணுக்களீல் செய்யும் அதிரடி மாற்றங்களே.
அணுத்தொகுதிகள்தான் நம் உயிர் வாழ்வுக்கான ஆதாரம். அவ்வுயிரணு தொகுதிகள் நம் உடலில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்த வடிவத்தில் வலது இடதாய் நம் உச்சி தலையை நோக்கி பயணப்படுகிறது. அங்கேதான் நம் ஜீவன் என்கிற சிவ லிங்கம் உள்ளது.
பாம்புகள் பின்னியிருக்கும் சந்திப்பு புள்ளிகளே நம் ஆதார சக்கரங்கள் செயல்படும் புள்ளி.
இடதும் வலதும் சமனிலைப்பட வேண்டும். மாறானால் இயல்பு நிலையில் மாற்றம்.
வெளியே இருக்கும் நாகலை பாருங்கள். அது நம் உள்ளேயும் இருக்கிறது. சுவாசத்தால் அந்த பாம்புகளை சுகமாய் வைத்திருக்க நம் ஜீவனுக்கும் சுகமே.
ஆயிரம் ஐன்ஸ்டின்கள் ஒன்று சேர்ந்தாலும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றும் 
அறிவியல் தன்மைகளோடு மனித சமூகத்தை வழிநடத்தும் நம் ஒரு கோவிலை உருவாக்க முடியாது.
முறையாக் சொல்லி தந்தால் நம் ஆன்மிகத்தின் மகத்துவத்தையோ..பெருமையையோ நம் இளையசமுகம் ஒருபோதும் மறுதலிக்காது.
இது என் கருதுகோல் மட்டுமல்ல திடமான முடிவும் கூட.
வாருங்கள் கூச்சப்படாமல் நம்முள் இருக்கும் நாகல்லை ஒரு சுற்று சுற்றி வருவோம்.





2 comments:

  1. அண்ணா,
    மிக மிக அற்புதமான பதிவு.

    அரச மரம்தான் போதி மரம் என்பதை நினைவூட்டியமைக்கு நன்றி.

    இன்றைய தலை முறைக்கு, எதையும் அறிவியல் பூர்வமாகச் சொன்னால்தான் ஏற்கிறார்கள்.

    (ஆக அரசமரத்தடியில் இரவிலும் நன்றாகத் தூங்கலாம்.)

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல கருத்துகள் ஐயா. படித்து மிக்க மகிழ்ந்தேன்.

    ReplyDelete