உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Tuesday, February 17, 2009

மனிதனின் ஆதி வியாதி


புண்ணிய தேசமாம் நம் பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகள் அல்ல உண்மையில் நடந்தேறியவை என நிறுவதை விட அந்த இதிகாச புராணங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் தர்க்க வாழ்வுக்கு தேவைப்படும் தத்துவ முத்துக்களை அனைவரும் அறிய கொட்ட வேண்டும் என்பது என் பேரவா.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கேற்ற தத்துவங்களை இதிகாசமாக்கினார்கள்.
அரிச்சந்திர புராணம்(பொய் இல்லை-புரட்டில்லை)
மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த யுகம் அது.
மனிதன் அரக்கர்களோடு மோதியது (பெண்ணாசைக்கு எதிரான போர்-இராமாயணம்)
மனிதன் மனிதனோடே மோதியது-மகாபாரதம்(மண்ணாசைக்கு எதிரான போர்)

இவைகளை கதைகளாக பார்க்கும் பக்குவமும், தத்துவங்களாக பார்க்கும் விசாரமும்,புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மனனிலைக்கு உட்பட்டது. 

அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் காண துடிப்பதும் அதையேதான்.
ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்க கூடும்.

படைப்புலகின் மிகப்பெரும் விலங்கு மனிதனே. அவனது ஆறாம் அறிவுக்கு காலம் இன்னும் நிறைய பதில்களை சொல்லத்தான் போகிறது.
எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உயிர், மனம், ஆன்மா இவற்றிற்காகத்தான் சொல்லப்பட்டன என்பது என் கருத்து.
நாளடைவில் அக்கதானாயகர்களுக்கு தனி மனிததுதி நடந்தேறியிருக்கலாம்.
ஆலயங்க்ளும் நிறுவப்பட்டிருக்கலாம்.

முதலில் இராமாயணத்தை எடுத்துகொள்வோம்
______________________________________________
பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம்." கண் இல்லாதவ்ர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கான கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று.
விஷயம் இதுதான்.
பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும்.
பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிட கூடும்.
பார்ர்க்கவும் முடியாமல்,பேசவும் முடியாமல்,கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டதக்கது.
இராமாயண கதையை ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன்.
"ஒரு ஊர்ல மூனு பேர் இருந்தாங்க. அதுல ரெண்டு பேரு ஆண், ஒரு பெண்.
ஒரு ஆம்பிளையோட் பேரு அறிவு. இன்னொருத்தன் ரு உடம்பு. அந்த பெண்ணோட் பேரு மனசு."
"இந்த மூனு பேரு சேந்து ஒரு நாள் பயணம் கிளம்பினாங்க. பயணம்னா சாதாரண பயணம் இல்ல ரொம்ப தூர பயணம். நடந்தே போனாங்க."
"நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிகிட்டே இருக்காங்க. திடீர்னு பார்த்தா பாதையே தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிகிடக்குது, இன்னொரு பக்கம் தண்ணியா ஓடுது. மூனு பேரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம் விழிக்கிறாங்க."
"அறிவு ஒரு பக்கம்  யாருக்கும் தொந்தரவு வராம போகணும்னு யோசிக்குது.
உடம்பு தனக்கு காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்ப்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு."
"அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுச்சி. அதை கேட்ட உடம்பு நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் 
உண்டாகும்னு சொல்லுச்சி. மன்சுகேக்கவே வேணாம் அந்த வழியில வரவே மாட்டேன்னு ஒரே அடம்."
"கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயை காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுல போகல்லம்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டங்க."
"அந்த பயணத்துல சோதனை மேல் சோதனை. மன்சு ஒரு பக்கம் போயிடுசி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத் பாடு பட்டுச்சி"
"அந்த அறிவுதான் ராமன்- உட்ம்புதான் லட்சுமணன்-மனசுதான் சீதை"
"மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம்.அறிவு சொல்வதை மனசு கேட்கணும்."
ராமன் பேரறிவு கடவுள். தம்பி லட்சுமணன் அவனை உடம்பு மாதிரி பிரியாதவன்.
சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவை திண்டாட வைத்த மனம்.
இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராக படையிலிட முடியும்.

மகாபாரதம்
________________
ஐந்து பேரு ஒரு பெண்ணொடு குடும்பம் நடத்தினாங்க.
அந்த ஐந்து பேரு யாரு..?- நம்மோட ஐந்து புலன்கள். ஐந்து புலன்கள் மனசோட சேர்ந்து வாழும்போது என்ன செய்யணும் என்ன செய்யகூடாது அப்படிங்கறதுதான் மகாபாரதம்.

உதாரணுத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி.
ராவணன் சீதயை தூக்கிட்டு போயிட்டான். ராமன் அல்லாட்றாரு.ஜடாயு ஒரு திசையை காட்டிட்டு செத்துடறாரு. அந்த திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்கு போனான். சீதையை பார்த்தான். கணையாழியை குடுத்தான். தன் நெஞ்சை தொறந்து காட்டினான். பத்தாத்துக்கு அந்த் இலங்கைக்கே தீ வச்சிட்டான்.

இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உனர வேண்டியிருக்கு.
ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். 
இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கபட்ட first party அப்படிங்கற முறையில சீதைதான் கொளுத்தணும். ரெண்டாவது வாய்ப்பு affectd party யின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கணும். கடைசி சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணன் எரிக்கலாம். ஏன்னா ரெண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..?

என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை.
அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். மாயை வசப்படுகையில் சீதையாகவும் ஆகிறோம்.
ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது.

சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரை கண்டிப்பாக தரிசித்து இருப்பார்கள். அந்த ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா?
"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்"
ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்'
ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். காமத்தை தீயிட்டு எரிப்பவன் அனுமன்.
அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு
இதிகாச பாத்த்ரங்களுக்கு கோவில் கட்டுவதை விட்டுவிட்டு மனதில் பிபற்ற துவங்கினால் நம் நாடும் வீடும் நலம் பெறும் என்பது அடியேனின் நம்பிக்கை.
காமமும் ஆசையும் வாசத்தின் மூலம் வரகூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை சுவாஸ்த்தை ஒழுங்குபடுத்துவத்ன் மூலம் அகற்றுகிறான்.
நம் உள்ளத்தில் ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் க்ட்டுவோம்.

 




1 comment:

  1. சிறுவர்கள் என்ன , பெரியவர்களே பல உண்மைகள்
    பிடிபடாமல்தான் இருக்கிறோம்.
    மிக நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

    தேவ்

    ReplyDelete